10 வரி போட்டிக் கதை: தழும்புகள் 

by admin 1
37 views

எழுத்தாளர்: நா.பா.மீரா

அறிமுக நடிகரான கதாநாயகன் , நவீன் பாபுவைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் கணக்காய் பெண்கள் கூட்டம் மொய்க்க

ஆட்டோகிராப் பெற்று ஒவ்வொருவராய் நகர்ந்தனர். 

கடைசியாய் அந்தக் கல்லூரிப் பெண் சார் தயங்கியபடியே விளித்தாள்-

கேள்வியுடன் நோக்கிய நவீனிடம் உங்களுக்குப் பிடித்த டிசைன் ப்ளீஸ்

அவன் முகத்தில் குழப்பத்தின் சாயல்

டாட்டூ போட்டு உங்க பெயரைப் பச்சை குத்திக்கத்தான்

நான்சென்ஸ் அவள் கையில் இருந்த ஆட்டோகிராப் புக்கை வீசி எறிந்தான் .

அந்தப் பெண் விழிகளில் நீர் நிறைந்து உறைய

நவீனின் மனக்கண்ணில் டாட்டூவிற்கு அடிமையாகி புற்று நோய் கண்டு இறந்த நண்பனின் தங்கை முகம் வந்து போனது. 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!