10 வரி போட்டிக் கதை: பற்களின் காவலன் 

by admin 2
64 views

தாத்தா ..இந்த அம்மா ரொம்ப மோசம் .எண்ணெய் சாக்லேட் சாப்பிடவே விடமாட்டேங்கிறாங்க …என்று அழுத பேத்தி அட்சயாவை சமாதானப்படுத்தி … கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்கிறார் சாம்பசிவம்.

சாக்லேட்  சூப்பர் தாத்தா ….அவர் கன்னத்தில் முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள் .

பேத்தியின் தலை கோதியவர்..நிதானமாக ….அப்பப்போ சாக்லேட் சாப்பிடலாம் …. தினம் தினம்கிறது …நல்லதுக்கு இல்லைடா கண்ணு …

சுவர் இருந்தாத்தானே சித்திரம் …. பற்களை நல்லாப் பராமரிச்சாத்தானே நமக்குப் பிடிச்சதைச் சாப்பிட முடியும் .

சரியா வாய் கொப்பளிக்காம ….ஈறுகளில் ஒட்டிக்கொள்கிற சாக்லேட் துணுக்குகள் கெட்ட பாக்டீரியாவை உண்டு பண்ணி … தாங்க முடியாம ஈறுகள் பற்களை உதிர்த்திடும் ….

வீடு வந்தவுடன் முதல் காரியமாக நன்கு வாய் கொப்பளித்தாள் அட்சயா.

 நன்றி    

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16643-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!