10 வரி போட்டிக் கதை: மின்னலில் பூத்த மலர்கள்

by admin 2
268 views

இருள்சூழ்ந்த அந்த வனாந்தரத்தில், விடாது பெய்துகொண்டிருக்கும் பேய் மழைக்கு
கிட்டத்தட்ட அவர்கள், ‘உறைந்து, கரைத்து’ விடும்படியாக இருந்தனர்.
அவள்: இந்த மின்னலுக்கு பூக்கின்ற காளான்கள், வியப்பல்லவா? (நடுங்கியபடி கேட்கிறாள்)
அவன்: இதிலென்ன வியப்பு? (அவனும் நடுக்கத்தின் உச்சத்தில் வினவினான்)
அவள்: ஆம், மின்னலுக்கு பூக்கின்ற காளான்களை போல், மற்ற மலர்களும் மலர்ந்தால்?
அவன்: மின்னலுக்கு பூக்கின்ற மலர்கள்?!

அவள்: ஆம்!
மழை வேகமெடுத்தது, அவர்கள் தாழ்வான இடத்திலிருந்து, ஒரு சிறிய கரடின் மேல் ஏறி
நின்றனர். அவள் கிட்டத்தட்ட குளிரில் விறைத்து, கண்களை மூடினாள்.
அவன்: மின்னலுக்கு தான் மலர்கள் பூக்க வேண்டுமா, அவைகள் பூத்துக்குலுங்க உன் பார்வை
போதாதா?!
அவள் கண்களை திறப்பதற்கும், அந்த மலைச் சரிவில் வண்ணப்பூக்கள்
பூத்துக்கிடக்கவும்,சரியாக இருந்தது.
அவள் புன்னகைத்தாள்! அவனும்!

முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!