எழுத்தாளர்: நா.பா.மீரா
தாத்தா அதோ மேலே பறக்கற பலூன் சூப்பரா இருக்கில்லே ஆறாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி குதூகலித்தாள். எதுக்காக இது மாதிரி பறக்க விடறாங்க தாத்தா ?
ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு தகவல் பரப்புற சாதனம்னு வச்சுக்கயேன் இன்னும் எளிமையா சொல்லணும்னா விளம்பரம் விழிப்புணர்வு மாதிரியான உத்திகளுக்கு உபயோகிக்கலாம்
ஓ விழிப்புணர்வு! எனக்கு ஒரு ஐடியா தாத்தா எங்க சயின்ஸ் டீச்சர் சொன்னாங்க ஓசோன்ல ஓட்டை பெரிசாயிட்டே இருக்காம் .
“ ஓசோன் படலம் காப்போம் தோல் புற்றுநோய் வெல்வோம்”, இப்படி எழுதிய பலூன் பறக்கவிட்டா உலகவெப்பமயமாதல் தவிர்க்க வழி பிறக்குமோ ? கேட்ட பேத்தியை விழி விரியப் பார்த்தார் தாத்தா.
முற்றும்.
.

 
