எழுத்தாளர்: ரங்கராஜன்
வலம்புரிசங்கு வீட்டில் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது என்ற விஷயம் கேட்டதிலிருந்து எப்படியாவது ஒரு வலம்புரிஜான் நம் வீட்டிலிருந்தால் நல்லது என எண்ணிய வீரமணி என்ன செய்ய என்று தெரியாமல் பூம்புகார் ஹேண்டிகிராப்ட்ஸ் அங்காடிக்குச் சென்று விசாரித்தான்.
கிளை மேனேஜர் ஒருவாரம் கழித்து வரச்சொல்ல,அவரிடம் சரி என்றவன் நேராக பெசன்ட் நகர் பீச் சென்று அஷ்டலஷ்மி கோயில் சென்று வெளியே வர ,அந்த சமயத்தில் அவனோடு படித்த மாரிமுத்து வந்து, குசலம் விசாரிக்க இருவருமு பரஸ்பரம் பேசியபிறகு மாரிமுத்து எனக்கு ஒரு வலம்புரிசங்கு தேவை, நீ வாங்கி தா என்றான் வீரமணி.
நீ நாளை மாலை இங்க வா என்றதும் வீட்டுக்கு சந்தோஷமாக போன வீரமணி மறுநாள் மாலை ஆஜர், மாரிமுத்து கையில் வலம்புரிசங்கு,உடனே வீரமணி கையில்வந்தது.
வீரமணி சரி எவ்வளவு ரூபாய் என்றதற்கு, ஒன்றம் வேண்டாம், திடீரென வலம்புரி சங்கில அப்படக என்ன, என்றவன் என்ராசிக்கு வலம்பரி சங்கு வீட்டிலிருந்தால் நல்லது அதனால் என்ற வீரமணியை வழி அனுப்பிய மாரி முத்து யோசிக்க ஆரம்பித்தான், வீரமணிக்கு நல்லது ஆனால் அதை வலை வீசி பிடித்த ராமன் எப்படி கடலில் விழுந்தான்.
எங்கேயோ இடிக்குதே என்ற படியே ராமனின் பாடி எடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய ச்சென்றான்.
முற்றும்.