100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: வள்ளல்

by Nirmal
192 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்

சொல்: குடை

வானத்தில் இருந்து தொடர் கம்பி போல மழை பெய்துக் கொண்டிருந்தது.
பலர் நனைந்து கொண்டே சென்றனர். டீ கடையில் உள்ள டி.வி யில் ‘இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்’ என்ற அறிவிப்பு.

கட்டுமானப்பணி வேலையாட்களுக்கு மழையினால் வேலை இல்லை. ரமணன் அவர்களில் ஒருவன். அங்கே  டென்டில் பசியுடன் தவிக்கும் மக்கள்.

ரமணன் தீர்மானத்துன் மொத்த விற்பனை கடைக்குச் சென்று அம்மாவிற்கு அனுப்ப வைத்திருந்த பணத்தில் நான்கு குடை வாங்கினான்.  பஸ் நிலைய வாசலில் கூவி கூவி விற்றான். நான்கும் விற்றது. இன்னும் ஐந்து வாங்கி அனைத்தையும் விற்று விட்டு அந்த குடும்பங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தான்.

நனைந்து கொண்டே வந்தவனை குடை இல்லையா என்று கேட்டார் ஒரு பெரியவர். ‘குடை தான் கொடை ஆச்சு’ என்று கூறிக்கொண்டே மகிழ்ச்சியாக உணவு அளித்தான் கொ(கு)டை வள்ளல்.

அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டனர்.

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!