படம் பார்த்து கவி: வியப்பாய வியப்பு

by admin 1
102 views

வியப்பாய வியப்பு

கண்ணாடிக் குடுவையில்
கனலாகக் கதிரவனை
ஓடும் நதியை
மோதும் முகிலை
வானளாவிய மலைகளை
செயற்கையாக …..
இதென்ன விந்தையா ???🤔

மண்ணை உண்ட வாயில்
ஈரேழு புவனம்
அகில அண்டம்
அதிலே கோகுலம்
யசோதா நந்தர் என
மாதவனைக் கண்ட
யசோதையின் வியப்பாய வியப்பே வியப்பு

பத்மாவதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!