எழுத்தாளர்: கவிஞர் வாசவி சாமிநாதன்
கால் கடுக்க நடந்து நடந்து வந்த ரிஷிக்கு பிழைப்புக்கு வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்
கையில் பழைமையான விளக்கு ஒன்று தான் அவனது சொத்து .
விளக்கை கையில் ஏந்தியபடி
மனம் நொந்து புழுங்கியபடி
கடற்கரையை அடைந்தான் .
பொழுது கருப்பு உடை அணிய ஆரம்பித்தது .
பிழைக்க வழி ஏதுமில்லையே என்று
அலையை வெறித்து பார்த்தபடி
விளக்கை அருகில் வைத்து அமர்ந்தான் .
சூரியன் துயில் எழ ஆரம்பிக்க
இரவு முழுவதும் வீசிய காற்று
விளக்கின் மேல்பட்டு தழுவ தழுவ அழகுதேவதை வெளிவந்தாள் .
மனிதா! “உனக்கு வேண்டியதை கேள் தருகிறேன்” என்றது! இனி நான் உன்னுடன் இருப்பேன் ! வேண்டியதை நான் தருவேன் ! என்று கூறியது.
” ரிஷி,நான் செய்யும் தொழில் நன்றாக வளரவேண்டும் என்றதும் ” “அப்படியே ! ஆகட்டும் “என்றது.
“உன்னிடம் உள்ளதை அறியாமல் வெளியே தேடாதே” என்றது தேவதை சிரித்தப்படி.
ரிஷி தன் நிலை உணர்ந்து ,,செங்கதிர்கள் அவன் மேல்பட
” புதிய விடியலை ” நோக்கி
புறப்பட்டான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
