எழுத்தாளர்: நா.பா.மீரா
ஜோதியின் முகம் வாட்டமாய் இருந்ததைக் கவனித்த தேவி —ஏண்டி ஒரு மாதிரியா இருக்கே ? ஊம் — பெரிய ஐ.டி. கம்பெனிங்கறாங்க —–பொண்ணுங்க எல்லாம் படுநாகரீகமாத்தான் உடுத்திட்டு வர்றாங்க —-ஆனா அவங்க கழிப்பறைய உபாயோகிக்கிற இலட்சணம்— அருவெறுப்பா இருக்குடி.
நீ சொல்றது சரிதாண்டி ஜோதி—- தண்ணீர் நிறையக் கொட்டி சுத்தம் பண்ற நம்ம ஊர் கழிப்பறைக்கு எதுக்கு டிஷ்யூ? எப்ப — எதுக்குன்னு தெரியாம படிச்ச பொண்ணுங்களே கண்டபடி வேஸ்ட் பண்ணுதுங்களே— என்னவோ போ நாம இப்படியே புலம்பிக்கிட்டிருக்க வேண்டியதுதான் ——-
மறுநாள் —
ஹாய் பிரெண்ட்ஸ்,
என்னைக் குறைவாக உபயோகியுங்கள் ப்ளீஸ் — தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம்.
இப்படிக்கு,
டிஷ்யூ
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
