படம் பார்த்து கவி: துரித உணவு துரித மரணம்

by admin 1
53 views

இன்றைய நவீன யுகத்தில்
ரொட்டியும் வேகாத முட்டையும்
எந்நேர உணவாகவும்
புசிக்கும் அன்னத்தில்
முதன்மையாய் இருக்கிறது…

ஊனெங்கும் கொழுப்பு
செழித்து வளர்ந்து
குருதி இனிப்பையும்
குருதி அழுத்தத்தையும்
பரிசளித்து – இதயத்திற்கு
பணி ஓய்வு கொடுக்கும்…

எளிதில் செரிமானமாகும்
உண்டி புசித்து வாழ்..
நாவின் ருசிக்கு மயங்காதே..
வயற்று பசிக்கு ஆகாரமிடு..

ஆரோக்கியமான உடலுக்கு
சரிவிகித உணவு..
வலிமை தரும்
பாரம்பரிய உணவை
உண்டு நீண்ட நாள் வாழ்..

துரித உணவை புசித்து
துரித மரணத்தை தழுவாதே…!

✍️அனுஷாடேவிட்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!