10 வரி போட்டிக் கதை: மோகம்

by admin 2
44 views

அப்பா… பல்சர் பைக் வாங்கலாமாப்பா …. விழிகளிலும், குரலிலும் ஏக்கம் தொனிக்கக் கேட்டான் பாலாஜி.

விரலுக்குத் தகுந்துதான் வீங்கணும் தம்பி …நமக்கெல்லாம் சைக்கிளே பெரிய விஷயம் … சொல்லிய தந்தையை நிராசையுடன் வெறித்தான் பாலாஜி.

பள்ளிப்படிப்பு முடிந்து …கல்லூரி சேர்ந்தவன் பகுதிநேர வேலை பார்த்துச் சேமிக்க …

எவ்வளவு பிடிவாதம் பார்த்தியா …அப்படியென்ன பல்சர் வெறியோ தெரியலை…

ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் ..குறைவான தவணைத் தொகையில் பல்சர் வாங்கி… அப்பா வாங்க …வந்து ஓட்டுங்க …. வண்டி உங்களுக்குத்தான் …

விழிகளில் நீர் பெருக …மகனைக் கட்டி அணைத்துக் கொண்டார் அந்தத் தந்தை.

முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!