எழுத்தாளர்: ரங்கராஜன்
ஒரு கம்பெனியில் வேலைக்கானநேர்காணல், சுமாராக 15நபரகள் வந்திருந்தனர். அவர்களை வரிசைப்படி உட்காரவைத்த கம்பெனி பணியாளர், ஒவ்வொருவர் பெயர் அழைத்தவுடன் அவர்களை உள்ளே அனுப்பினார்.
ஒவ்வொவருவரையும் நேர்காணல் முடிந்ததும், முதலாளி வெளியே காத்திருக்கச்சொன்னார்
தன்முயற்சியில் சற்றம் மனம் தளராத சேகர் அடுத்ததாக உள்ளே சென்றான்.
முதலாளி ரூமுக்குப் போகும் முன்பு வராந்தாவில் 6பேன்கள் ஒடிக்கொண்டிருக்க அங்கே யாருமில்லை ,சேகர் அது அத்தனையும் நிறுத்தினான். அடுத்ததாக ஒரு டாய்லெட் ரூம் திறந்த நிலையில் உள்ளே குழாய் திறந்து தண்ணீர்கொட்டிக் கொண்டிருக்க, அதனையும் மூடி டாய்லெட் கதவை சாத்திவிட்டு வந்தான்.தொடர்ந்து முதலாளி வாசலில் இருந்த மிதியடியில் வெல்கம் வாசகமு தலைகீழாக இருக்க அதை சரிசெய்து உள்ளே நுழைய முற்பட்டார்கள்.
அதற்குள் முதலாளி வெளியே வந்து யூ ஆர் செலக்டட் என்றார், நேர்காணல் நடக்கவில்லை என்றதற்கு, உன்னுடைய செய்ககைகளை நான்கவனித்தேன், பேன்களை நிறுத்தி, டாய்லெட் மூடி, என் வாசலில் இருந்த மிதியடி சரியான முறையில் வைத்தாய், ஆக நீ வேலையிலும் சரியாக இருப்பாய் என்றார்.
மீதமுள்ளோர்களுக்கு வேலை இல்லை, சுற்றுப்புற சுகாதாரம் மூலமாக சேகருக்கு வேலை கிடைத்தது.
நன்றி