எழுத்தாளர்: நா.பா.மீரா
அங்கிள்…. ஸ்பானர் இருக்குமா …கேள்வியாகப் பார்த்த கிருஷ்ணனிடம் ….மோட்டார் தண்ணீர் எடுக்க மாட்டேங்குது … பிளம்பரக் கூப்பிட்டா இதோ …அதோன்னு இழுத்தடிக்கிறார்.
ஊருலேருந்து வந்திருக்கற அப்பா …. எவ்வளோ சொன்னாலும் கேக்காம தான் பார்க்கிறேங்கராரு .. சலிப்புடன் விவரித்த விக்ரம் … நன்றி கூறிப் புறப்பட்டான்.
ஸ்பானர் கொண்டு இப்படியும்.. அப்படியும் திருகி … ஒரு வழியாய் மோட்டார் எடுக்க …ஒரே ஆச்சரியம் விக்ரமுக்கு .
எப்படிப்பா … இது போலத்தான் அடிக்கடி ஏதோ பண்ணி … ஐந்நூறு ரூபாய் மொய் வைக்கணும் எங்க பிளம்பருக்கு …
மதியம் அந்தப்பக்கமாக வந்த கிருஷ்ணனிடம் ஸ்பானரைத் திருப்பிகொடுத்த நாராயணன் வெறும் காத்தடைப்பு பிரச்சனை ….ஊம் .. இதுக்குப் போயி பிளம்பராம் … காசுதான் தண்டம்…. தலையசைத்து நகர்ந்தார் கிருஷ்ணன்.
முற்றும்.