10 வரி போட்டிக் கதை: ஏழையின் தர்மம் 

by admin 2
46 views

காய்மா…காய் ….தனபாக்கியம் … கொரோனா காலத்தில் தொடங்கி…. இன்றும் விடாமல் கூவி விற்கும் , பிரஷ்ஷான காய்கறிகளுக்கு அந்த ஏரியாவில் தனி மவுசு. 

பரங்கிப்பத்தை வைச்சிருக்கியா , கேட்டபடி அருகில் வந்தாள் வாசுகி . 

என்ன …தங்கக் கலர்ல இருக்குங்கிறதுக்காக தங்கம் விலை சொல்றியே … விடாப்பிடியாக பேரம் பேச கொடுத்துவிட்டு நகர்ந்தாள் தனபாக்கியம். 

தாயின் நினைவு நாளுக்குப் பணம் கட்ட வழக்கமாக வரும் ஆசிரமத்திற்கு வந்த வாசுகி …எதேச்சையாக  தனபாக்கியம் வெளியே செல்வதைக் கவனித்தவள் … நிர்வாகியிடம் விசாரிக்க ….

பெரிய குடும்பம் …கஷ்ட ஜீவனம்தான் ….ஆனாலும், காய் விற்று வருகிற லாபத்துல ஒரு பகுதி மிச்சப்படுத்தி …. மாசாமாசம் டொனேட் செய்யிறாங்க …

ஏனோ, மனதளவில் குறுகியதாக உணர்ந்தாள் வாசுகி. 

 முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/17130-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!