எழுதியவர்: அனுஷாடேவிட்
மெய் எழுத்து வார்த்தை: உணர்வு / ர்
“என்னச் சொல்லிக் கொடுத்து வளத்தாங்க உங்க வீட்டில்? ஒரு வேலையும் உருப்படி கிடையாது ம்ஹூம்” என்று முணுமுணுத்துக் கொண்டேக் காய்கறிகளை அரிந்தார் ஆதிரையின் மாமியார் அன்னபூரணி.
மணமாகி ஒரு வாரமே ஆகியிருக்க விழிகளில் நீருடன் உணர்வற்று அமைதியாக நின்றிருந்தாள் ஆதிரை.
அறையிலிருந்து வெளியே வந்த மகள் ரஞ்சனி
“அம்மா அவரு வெளியூர் கிளம்புராம் இன்னும் ஒரு வாரம் ஆகுமாம் இருந்துட்டு வரச் சொல்றாரு”
“சரிடி இருந்து போ. சாப்பிடுறியா?”
“என்னம்மா செஞ்சிருக்க?”
“இன்னும் சமைக்கவே இல்லை எந்த வேலை சொன்னாலும் மரம் மாதிரி நிக்கிறாளே”
“ம்மா… என்ன பேசுற? நான் கல்யாணம் ஆகிப் போகும்போது கூட எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் என் மாமியார் ஒரு வார்த்தை கூட மனம் நோக பேசுனது இல்லை. உன்கிட்டயிருந்து இதை எதிர்பாக்கலம்மா”
“என்னடி இப்படி பேசுற?”
“பேசாம உள்ள போம்மா.” என்றவள்
“அண்ணி எதுனாலும் தயங்காமல் என்கிட்ட பேசுங்க” என்றவாறு நட்புணர்வுடன் ஆதிரையை அணைத்துக்கொண்டாள்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.