ஒரு நாள் போட்டி கதை: அன்பில் அடங்கிய ஆணவன்

by admin 2
68 views

எழுதியவர்: சினேகிதா ஜே ஜெயபிரபா

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர்கொலைகாரனோடு !

தனது இருசக்கர வாகனத்தில்    மனதுக்குள் சுபிதாவை திட்டியபடியே விர்ரென விரைந்த சினேகா தனது தாயின் உடல்நிலை காரணமாக இரவு பணிக்கு வர இயலாதென பணிக்கு சேரும்போதே சொல்லித்தான் சேர்ந்திருந்தாள் மருத்துவர் சுபிதா திடீரென குறுஞ்செய்தி போட்டிருந்தார் எமெர்ஜென்சி சோ கைன்ட்லி ரெக்வெஸ்ட் ஐ வில் டேக் டு ஹவர்ஸ் பர்மிஷன் சினேகா சாதாரணமாக எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் ரகம்தான்  எனினும் வழக்கமா 8மணிக்கு செல்லும்போதே இலேசான பயமிருக்கும் இன்றோ இரவு10.40 ஆகிறது பயம் அப்படியே அப்பிக் கொண்டது பயத்தை வெளிக்காட்டாமல் சாலையை கடக்க முயன்றவள் அங்கே புதருக்குள் ஒரு ஆடவனின் உருவம் கண்டு அதிர்ந்தாள்

சாலை மேம்பாலத்தின் கீழ் சற்றே ஒதுக்குப்புறமாய் அமைந்திருந்ததால் இரவிருட்டில் பெரிதாய் நடமாட்டம் ஏதுமிருப்பதில்லை எப்போதாவது ஒன்றிரண்டு வாகனம் பாலத்தின் மேலே சென்றது இங்கிருந்து ஐந்து நிமிடம் நடந்து போற தூரத்தில் தான் வீடு இருந்தது இதோ  வீடு வந்துவிட்டதென நிம்மதி பெருமூச்சு விட்டவளோ  பயமும் பதற்றமுமாய் பரிதவித்து நின்றாள்

உயிர் இருந்தால் தன்னால் காப்பாற்ற இயலுமானால் காப்பாற்றி விடலாமே என்று உள்மனம் சொல்ல  வாகனத்திலிருந்து இறங்கி அருகில் சென்று பார்த்தாள்  உளரும் சத்தமேதோ கேட்கவே உற்றுக்கேட்டாள் தண்ணீர் தண்ணீர் என்று குரல் கேட்டவள் ஓடிப்போய் வாகனத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அந்த நபரின் தலையை தூக்கி வாயில் ஊற்றினாள் அவளது கையில் ஏதோ பிசுபிசுவென ஒட்டவே என்னவென்று வெளிச்சத்தில் பார்த்தவள் மேலும் அதிர்ந்தாள் 

இரத்த வெள்ளத்தில் தலையில் அடிபட்டு கிடந்த நிலைகண்டு பயம் ஒருபுறம் இருந்தாலும்  உயிரை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமே அவளிடம் அதிகமாய் இருந்ததால் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு கையை தோளோடு சேர்த்து தூக்கி சிரமத்தோடு  தன் தோளில் சாய்த்துக்கொண்டு மெல்ல வீடு வந்து சேர்ந்தாள் வீடு வந்து சேரும்வரை அவளுக்குள் பலவிதமான எண்ணம் யாராவது மேலிருந்து கீழே தள்ளிவிட்டிருப்பார்களா அல்லது வாகனத்தில் வந்தவர் தவறி கீழே விழுந்து இருப்பாரா என்ன நடந்திருக்குமென வீடு வந்தவள் எது எப்படியானாலும் உயிரை காப்பாற்றி விடுவோம் அதன் பின் கடவுள் விட்டவழியென எண்ணிக்கொண்டாள் மருத்துவமனையிலிருந்து கிளம்பும்போதே அம்மாவுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்திருந்தாள் இன்று நான் வர தாமதமாகும் சாப்பிட்டு தூங்குங்க காத்திருக்க வேண்டாமெனஅவளது அம்மாவுக்கு பிரஷர் இருக்கிறதுனால மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கிட்டாங்க 

ஆகவே எந்தவித தொந்தரவும் இல்லையென்றாலும் யாராவது உடனிருந்து உதவி செய்தால் நன்றாக இருக்குமென்றே எண்ணிக்கொண்டாள் மனதுக்குள் அவசர அவசரமாக தனது அறைக்குள் சென்று உள்ளிருக்கும் குளியலறையில் பெயரளவில் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு உடைகூட மாற்றாமல் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த நபரின் அருகில் மருந்து பெட்டியுடன் வந்தாள் 

அவளது உள்மனம் அவளிடம் பல கேள்விகள் கேட்டன யாரோ எவரோ கொலைகாரனோ கொள்ளைக்காரனோ நாளை இதனால் என்னென்ன பிரச்சனைகள் சந்திக்க நேரிடுமோவென எனினும் அவள் மருத்துவம்படிக்க முன்வந்த முதல் நாளே மனதில் எடுத்துக்கொண்ட உறுதிமொழி தன்னையே கொலை செய்ய வருபவனாய் இருந்தாலும் அவனது உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் அவன் உயிரை காக்கவே முயல வேண்டுமென அதன்படி அத்தனை எண்ணங்களையும் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு மிகவும் சிரத்தையோடு காயங்களை சுத்தப்படுத்தி மருந்திட்டு கட்டு போட்டாள்

மயக்க ஊசிக்கு எப்படியும் இன்னும் நாலு மணி நேரம் நிம்மதியாக தூங்குவானென மனதில் எண்ணியவள் திடுக்கிட்டு திரும்பினாள் மயக்க நிலையில் பேசுகிறான் தெளிவாக காதில் விழவில்லை  சற்றே குனிந்து கேட்டாள் அவன் கழுத்திலொரு தங்கச் சங்கிலி மின்னியது  குறைந்தது 7 பவன் இருக்கலாம்  அவன் அதை பற்றி தான் கூறுகிறானென அவளுக்குள் தோன்றியது உன்னோட செயின் பத்திரமா உன் கழுத்துல தான் இருக்குது என்றாள் ஆனால் அவனோ அதைப்பற்றி கூறவில்லை  என்னோட செயின் உனக்கு கொடுக்கிறேன் இந்த இரவு மட்டும் என்னை சந்தோஷப்படுத்துகிறாயா? என்றான் அவளால்  சற்று நேரத்துக்கு அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை இந்த நிலையிலும் இப்படி பேசுகிறானென இருப்பினும் ஊசி போட்ட மயக்கத்திலே ஏதோ உளறுகிறானோ என்று எண்ணிக்கொண்டாள் 

அவன் அவனது அருகில் சென்று நெற்றியை தடவியபடி உனக்கொன்னும் ஆகாது பயப்படாதே காலையிலே நீ வழக்கம் போல எழுந்துருச்சு உன்னோட வேலையை பார்க்கலாம் சின்னக்காயம் தான் நிறைய ரத்தம் போயிருக்கு வேற ஒன்னும் இல்ல நீ தைரியமாயிரு என தைரியம் கூறினாள்

அவனோ குளறிய வார்த்தைகளால் இன்னும் குதறினான் வாயில் வார்த்தை வரவில்லை ஆனாலும் பேசினான்  என்கிட்ட நிறைய சொத்து இருக்கு உனக்கு என்ன வேணும்னாலும் தரேன் இந்த நைட் மட்டும் என்னோட க்ளோசா இரு என்றான் அவள் அவனிடம் ரொம்ப வலிக்குதா பிரெயினுக்கு போற நெர்வ் ல அடிபட்டிருக்கு அதுதான் உனக்கு ரொம்ப பெய்னா இருக்கு 

நான் சரியான இன்ஜக்க்ஷன் போட்டிருக்கிறேன் காயத்துக்கும் மருந்து வைத்து கட்டுபோட்டிருக்கிறேன் உனக்கு ஒன்னும் செய்யாது காலையில் நீ நார்மலா எழுந்திருச்சு உன்னோட வொர்க்லாம் பார்க்கலாம்  பட் ரொம்ப ஸ்டெய்ன் பண்ணிக்காத நீ குணமாகுற வரை இங்கே இருந்து குணப்படுத்திக்கிட்டு போறதா இருந்தா போகலாம்  இல்ல வெளியே வேற டாக்டர் பார்த்து மெடிசின் போட்டுக்கிறதா இருந்தாலும் பரவாயில்லை இதுக்கு மேல உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல  நீ குணமாயிடுவ என்று சமாதானப்படுத்தி படுக்க வைத்து தூங்கும் வரை ஆறுதல் வார்த்தைகள் கூறினாள்

மீண்டும் ஏதேதோ பேசியவன் அப்படியே தூங்கி விட்டான் என்றாலும் அவன் பேசிய அத்தனை வார்த்தைகளும் உனக்கு என்ன வேணாலும் தரேன் என்னோட ஜாலியா இரு சினேகா மனதுக்குள் மருந்தின் வீரியம் தான் இப்படி பேச வைத்துள்ளது என்று எண்ணிக்கொண்டாலும் அவனை பெண்கள் விசயத்தில் நல்லவனாக எண்ணிக்கொள்ள இயலவில்லை குளியலறை சென்று லேசான குளியல் போட்டுவிட்டு உடைமாற்றியவள்  அம்மா ஹாட் பாக்சில் சுட்டுவைத்திருந்த தோசையை எடுத்து சாப்பிட்டாள்  சிறிது நேரம் புத்தகம் வாசித்து விட்டு அப்படியே தூங்கிவிட்டாள்

என்னதான் இரவு நேரமாகி தூங்கினாலும் அவளது வழக்கப்படி விடியலில் நாலு மணிக்கே அலாரம் இல்லாமல் விழித்து விடுவாள். இன்றைக்கும் அப்படித்தான் கண்விழித்து பார்த்தவள் திடுக்கிட்டாள் 

இரவு கண்டது கனவா என்று எண்ணுமளவு அவள் கட்டு போட்டு படுக்க வைத்திருந்த நபர் இருந்ததற்கான தடயமே அங்கு காணப்படவில்லை எங்கே என்று எண்ணம் தோன்றினாலும்  தேட வேண்டும் என்று தோன்றவில்லை உயிர் பிழைத்து விட்டான் என்று  நிம்மதி மட்டும் மனதில் தோன்ற வழக்கப்படி காலையில் குளித்து காலை வேலைகளை தொடர்ந்தாள்

ஆறு மணி சுமாருக்கு இரவிருட்டை விரட்டிய கதிரவன் சமையலறை ஜன்னல் வழியாக அவளது கன்னம் தீண்டினான் கடிகாரத்தை பார்த்தவள் அம்மாவை எழுப்பி காபி குடிக்க சொல்லணும் என்று தாயின் அறை நோக்கி சென்றபோது காலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்டு வாசல் நோக்கி நடையை திருப்பினாள்

யாராக இருக்கும் ஒருவேளை போனவன் திரும்பி வந்திருக்கானா என்று எண்ணியபடியே கதவை திறந்தாள் அவளது வகுப்பு தோழன் சந்தோஷ் வந்திருந்தான் 

என்னடா அதிகாலையிலே இங்க வந்திருக்க இன்னைக்கு டூட்டி ஏதுமில்லையா என்று கேட்டாள் 

டூட்டியாக தான் வந்துருக்கேன் சினேகா என்றவன்  போலீசுக்கே உரிய தோரணையில் கண்களால் உள்ளறை வரை துழாவினான் 

என்ன சார் என்ன மேட்டர்னு தெரிஞ்சுக்கலாமா என கிண்டலாக கேட்டாள்

டெஃபனெட்லி உன்கிட்ட எதை மறைக்க போறேன் நான் என்றான் 

பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் போதே சினேகாவின் மீது சந்தோஷ்க்கு ஒரு ஈர்ப்பு இருந்தது அது சினேகாவுக்கும் தெரியும் ஆனால் இன்று வரை சினேகா பிடி கொடுத்து பேசியதில்லை  சந்தோஷ் ம் சினேகாவை கட்டாயப்படுத்த விரும்பியதில்லை எனினும் அவளுக்காக காத்திருக்க தயாராக இருந்தான்

சினேகா நேத்து எனக்கு உங்க ஏரியா தான் நைட் ரவுணட்ஸ் அப்பதான் எனக்கு வாக்கிடாக்கில தகவல் கிடைத்தது நம்ம டிஸ்ட்ரிக்ட்ல இப்போ நடந்துட்டிருக்குற தொடர் கொலைகளோட கதாநாயகன் அந்த கொலையாளி இந்த ஏரியாவுல கிராஸ் பண்றதா தகவல் கிடைச்சதும் நான் ஃபாலோ பண்ணிணேன் அவனைப் பார்த்து விரட்டினேன் என்னோட டீம் க்ளோசா தான் வந்தோம்

 ஆனால் இந்த பாலத்து பக்கம் வந்த பிறகுதான் திடீர்னு மாயமா மறைஞ்சுட்டான் ஓ.. ஒருவேளை மாயாஜால வித்தை தெரிஞ்சவனா இருப்பானோ என்று எப்போதும் போலவே சந்தோஷை கிண்டலடித்தாள் சினேகா

சந்தோஷ் வழக்கம் போல அவளது கிண்டலை ரசிக்காமல்  சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு உன்னோட விளையாட்டுத்தனத்தை எல்லாத்துலையும் வச்சுக்காத  நானே பயந்து போய் வந்திருக்கேன் 

அவன் தொடர்ந்து கொல்வோர்களின் பட்டியலை பார்க்கும்போது பெண் மருத்துவர்களைத் தான் குறி வைக்கிறான் என்றவன் இரவெல்லாம் தூங்காமல் தேடி இருக்கிறோம் சற்று முன் கிடைத்த தகவல் படி  உன் வீடு திரும்பும் தெருமுனையில் அவனது உடைந்த ஹெல்மெட் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனத்தொடர்ந்தவன்  எனக்கு அந்த ஹெல்மெட் மேலதான் கோபம் கோபமா வருது அவனது முகத்தை கூட பார்க்க முடியவில்லை என்றவன் அவனது பேச்சை முடிக்கவில்லை சற்றே நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான் 

என் மனதில் முதலில் உன் முகம் தான் வந்து போனது என்றவனின் பேச்சினூடே கிண்டலாக நான் உயிரோடு தான் இருக்கேன் என்னை யாரும் கொலை பண்ணல என்றாள் சினேகா

அப்படின்னா கொலைகாரன் எப்படி இருப்பான் என உனக்கு தெரியாது என்றாள் மீண்டும் கிண்டலாக நான் பார்க்க முடியவில்லை, ஆனால் அவன் முகம் எனக்குத்தெரியும் என்றவன் தனது கைபேசியை எடுத்து அதில் இருந்த அவனது புகைப்படத்தை காட்டினான் எனிவே பீ கேர் ஃபுல் ஏதாவது சந்தேகப்படுற மாதிரி விஷயம் நடந்தாலோ புதிய நபர் யாராவது சந்தித்தாலோ உடனே இன்பார்ம் பண்ணு டேக் கேர் மா என்றவன் வெளியேற திரும்பினான் 

ஓகே எதுனாலும் சொல்றேன் பயப்பட வேண்டாம்  எனக்கெதுவும் நடக்காது என்றவள் உள்ள வந்து காபி சாப்பிட்டு போகலாமே என்றாள் இவள் இதுவரை இப்படி கூப்பிட்டது கிடையாது இருந்தாலும் இப்போது சந்தோஷ்க்கு நேரமில்லை என்பதால்  இன்னொரு நாள் பார்க்கலாம்  முதலில் கொலைகாரனை பிடிக்கிறேன் பிறகு வந்து விருந்து சாப்பிடுகிறேன் என்று வெளியேறினான்

இத்தனை நேரம் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த பதற்றத்தை சினேகாவால் அடக்கி கொள்ள இயலவில்லை புகைப்படத்தை பார்த்ததுமே அவளது மனதுக்குள் பெரும் பூகம்பமே வெடித்து சிதறியது ஓடிச்சென்று சாமியறையில் சாமி கும்பிட்டு விபூதி போட்டுக் கொண்டாள் 

பிறகு தாயை எழுப்பி சாப்பிட வைத்து மதியஉணவை ஹாட்பாக்ஸில் எடுத்துவைத்தவள் அவளது டிபன் பாக்ஸிலும் எடுத்து வைத்துக்கொண்டு வழக்கம் போல் ஸ்கூட்டியில் மருத்துவமனை நோக்கி கிளம்பினாள்

தனது வாகனத்தை நிறுத்துமிடத்தில் நிறுத்தியவள் கைப்பையை எடுக்க முயல்கையில்தான் அதன் அருகில் ஒரு காகிதம் இருந்ததை கவனித்தாள் பிரித்துப் பார்த்தால் முத்து போன்ற எழுத்தில் என் வாழ்நாளில் நான் சந்தித்த பெண் தெய்வத்திற்கு நன்றிகள். என எழுதப்பட்டிருந்தது முதலில் சினேகாவுக்கு புரியவில்லை பிறகு யோசித்தவள் மனதில் நேற்று இரவு தன்னுடன் தங்கிய கொலைகாரனாய் இருக்குமோ என தோன்றியது 

இப்போது அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் அவளுக்குள் தோன்றியது மருத்துவமனைக்குள் நுழைந்தவள் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள் ஆங்காங்கே இரண்டொருவர் கூடி நின்று மொபைலை பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர் வழக்கம் போலவே முதல் வேலையாக உள் நோயாளிகளை சந்திக்க செல்ல சினேகா தயாரானாள் அவளுடன் நர்ஸ் ரோசினியும் வருவாள் சினேகாவுக்கு முன் தயாராக இருக்கும் ரோசினி இன்றென்னவோ பத்து நிமிடம் காத்திருந்தும் வராதவுடன் சினேகா மேசையில் இருந்த அழைப்பு மணியை அதற்கு வலித்திடாமல் மெல்ல அழுத்தினாள்  அடுத்தநொடி ரோசினி வாசலில் வந்து நின்றாள்  ரோசினி வாட் ஹேப்பன்ட் சீ யுவர் வாட்ச் என்றாள் சினேகா சற்று குரல் உயர்த்தி சாரி மேடம் இதோ வந்துட்டேன் என்றவள் உடனடியாக ரவுண்ட்ஸ் போவதற்கு தேவையான ரிப்போர்ட்ஸ் எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள்

சினேகா இந்த மருத்துவமனையில் பணியில் சேர்ந்த நாள்முதல் இதுவரை எந்த பணியாளரிடமும் கடுமையாக பேசியதில்லை அதிலும் ரோசினியிடம் நெருங்கிய தோழியை போல் தானிருப்பாள்   ரோசினிக்கும் தெரியும் சினேகாவை அவளும் அவளிடம் தோழியைப்போல் தான் பழகுவாள்

முதல் தளம் முடிக்கும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை இரண்டாம் தளத்துக்கு செல்லும் வழியில் ரோசினி மெல்ல தொடங்கினாள் மேடம் உங்களுக்கு தகவல் ஏதாவது தெரியுமா பிரபல தொடர்கொலைகாரன் இன்று காலையில் நமது மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர் ஆவதாக fbல வீடியோ போஸ்ட் போட்டிருக்கான்

அதில் அவன் தொடர் கொலை செய்வதற்கான காரணமாக அவனது தந்தையை ஒரு பெண் மருத்துவர் மயக்கி தன் குடும்பத்தை சீரழித்ததாகவும் அதற்காக ஒவ்வொரு பெண் மருத்துவரையும் தேடிச்சென்று அவர்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி தன் இச்சைக்கு பயன்படுத்தி கொலை செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறான் 

மேலும் நேற்றிரவு போலீசிலிருந்து தப்பி செல்லும் போது பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயத்தோடு உயிருக்கு போராடிய நிலையில் அந்த வழியில் சென்ற ஒருவர் கூட கண்டு கொள்ளவில்லையாம் ஏதோ ஒரு பெண் மருத்துவரால் தன் உயிர் காக்கப்பட்டது மட்டுமின்றி இத்தனை நாள் தன் மனதிலிருந்த அழுக்கை மொத்தமாக அகற்றிய  பெண் தெய்வமாய் அந்த மருத்துவரை கண்டதாகவும் அதன் மூலம்  தான் இத்தனை நாள் செய்த தவறை உணர்ந்து அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள முன்வருவதாகவும் கூறியிருக்கிறான் ரோசினி சொல்லி முடிக்கும் போது இரண்டாம் தளம் நோயாளிகள் பிரிவு வந்தது 

சினேகா வழக்கம்போல் நோயாளிகளோடு இணைந்து தனது பணியை தொடர்ந்தாள் அதுவும் குழந்தைகள் தளம் என்பதால் குழந்தையோடு குழந்தையாகவே மாறிவிடுவாள்

குழந்தைகள் என்றாலே இயல்பாகவே அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் சினேகா டாக்டர் வந்தால் தான் எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும் குழந்தைகளோடு விளையாடியபடியே பணிசெய்வாள்  11 மணிக்கு தனது இருக்கையில் வந்து அமரும்போது சந்தோஷிடமிருந்து தொலைபேசி அழைப்பு

தொலைபேசியை காதில் வைத்து சொல்லு சந்தோஷ் என்றாள்

என்ன சொல்ல சொல்ற என்றவன் யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறாயா எனக்குத்தெரியும்  அந்த ஆணவக் கொலைகாரனையே அன்பால் மாற்றிய பெண் தெய்வம் என் இதய தெய்வம் நீயென

சினேகா இப்போதும் கிண்டலாக அப்படின்னா என்னைக்கு விருந்து சாப்பிட வருகிறாய் ஒரு நாள் விடுப்பு எடுக்கிறேன் உனக்காக என்றாள்  சந்தோஷுக்கு சினேகா தனது காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாகவே தோன்றியது வருகிறேன் ஒரு நல்ல நாள் பார்த்து அம்மா அப்பாவுடன் உன் அம்மாவிடம் பெண் கேட்டு என்று கூறியவன்  மீண்டும் விரைவில் சந்திப்போம் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தான் 

சினேகா தனது மருத்துவ பணியிலே மிகுந்த மன நிறைவை இன்று உணர்ந்தாள்

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!