காதல் பேசும் பிப்ரவரி: பிராசாதம்

by admin 2
40 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

கோவில் காதல்..! 

என் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு சாஸ்த்தா கோவில் இருந்தது. சாய் பாபா சன்னதி இருந்தது. 

வாரா வாரம்… வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை கோவிலுக்கு செல்வேன் 6.40 க்கு தீபாராதனை. பின்னர் பிராசாதம். பிரசாதம் மிக ருசி. பிரசாதம் கோவில் தர்மகர்த்தா மகள் தான் வழங்குவார். அவர் எதோ வேலையில் இருந்தார். நான் கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பவர் என்று எனக்கு நன்கு தெரியும். இருந்தும் ஏன் கோவிலுக்கு செல்கிறேன் என்றால்.. 

              1. சைட் அடிக்க

              2,. பிரசாதம். 

அவர் பெயர் சுதா. மிகவும் கவர்ந்து இழுக்கும்  முகம். அவர் எனக்கு புன்னகையுடன் தான் பிராசதம் கொடுப்பார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை கல்யாணம் செய்து கொள்ள ஆசை. எப்படி ஏங்கே சொல்வது என்று தெரியவில்லை. 

காதல் வந்தால் தைரியமும், துணிச்சலும் வந்து விடும். இன்று சனிக்கிழமை. நான் ஒரு முடிவுடன் கோவில் சென்றேன் என்பதை விட என் காதலை தெரிவிக்க வேண்டும் என்றே சொல்லலாம். பிரசாதம் வாங்கி விட்டு” சுதா… கொஞ்சம் வெளியே வாங்கள்…! ” என்றேன். 

சுதா வெளியே வந்தார். நான் திக்கி தடுமாறி எப்படியோ சொல்லி விட்டேன். அவர் எந்த உணர்வையும்  வெளிப்படுத்த வில்லை. ஒரிரு நிமிடங்கள் யோசித்துவரும் வியாழக்கிழமை சொல்கிறேன் என்றார். 

அடுத்த வியாழக்கிழமை வரைபொறுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டேன். டென்ஷன் . பதட்டம். பயம. என எல்லாம் வந்தது. 

இன்று வியாழக்கிழமை. மாலை சுதா என்ன சொல்லுவார் என தீர்மானிக்க முடிய வில்லை. இதோ கிளம்பி விட்டேன்…! 

             சுதா என்ன சொல்வார்..? 

             லப்-டப்.. 

             லப்-டப்… 

             அதிகரித்தது…! 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!