அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
2025 ஆம் ஆண்டின், பிப்ரவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை, எழுத்தார்வம் கொண்டவர்களுக்காய் அரூபி தளம், வித்தியாசமான அங்கம் ஒன்றை ஆரம்பித்து உள்ளது.
அதுதான், ‘யாவரும் வெற்றியாளரே!’என்ற அங்கமாகும்!
💡ஒவ்வொரு மாதமும் போட்டி அடிப்படையில், விதவிதமான களங்களில் இவ்வங்கத்தில் நிகழ்வுகள் நடத்தப்படும்.
💡இது முழுக்க, முழுக்க எழுத விருப்பம் கொண்ட, எழுத்தில் மேம்பட விரும்பும், எழுத்தை நேசிக்கும், எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள நினைக்கும் எழுத்தாளர்களுக்கான வாய்ப்பாகும்.
💡எழுத்தில் தத்தி, தவழ்ந்து உங்களுக்கான இடமொன்றை நீங்கள் பிடித்திட, அரூபி தளம் இனி ஏணியாய் உங்களோடு பயணிக்க போவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.
💡இதில் வெற்றி தோல்வி என்று எதுவுமில்லை.
💡எழுதி குவிப்பது மட்டுமே உங்கள் வேலை.
ஆகவே, அனைவரும் திரண்டு வாருங்கள்!
மார்ச் மாத போட்டியின் தலைப்பு: பாலியல் பேசும் மார்ச்!
🪄 பாலியல் வதையானது பெரியவர்கள் முதற்கொண்டு சிறுவர்கள் வரை சிக்கி தவிக்கும், சமூதாய சீர்கேடுகளில் ஒன்றாகும்.
🪄 இப்படியான துன்பத்தில் மாட்டிக்கொண்ட பலரின் கதைகள் வெளிவருவதே இல்லை. சுற்றத்திற்கு அச்சப்பட்டு இதை பற்றி பேசிடவே அஞ்சுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
🪄 இந்த அவலமானது, பள்ளிக்கூடம் தொடங்கி பணியிடம் வரை, ஆண், பெண் என்று பாராது வயது வரைமுறை இன்றி, அனைவரையும் பதம் பார்க்கிறது.
🪄 தெரிந்தே இடிப்பது, தொடுவது என்று பேருந்தில் ஆரம்பித்து அதிகாரம் இருக்கின்ற காரணத்தால் பேச்சால், பார்வையால் கூட, பாலினம் பாராது ஒருவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வண்ணம் செயல்கள் புரிவதென்று, இன்றைய நிலையில் பலர் சாதாரணமாய் கடந்து செல்லும் பல விசியங்கள் பாலியல் சார்ந்த குற்றத்திலேயே சேரும்.
🪄 ஆகவே, மார்ச் மாதத்தின், ‘யாவரும் வெற்றியாளரே’ அங்கத்தின் போட்டிக்கு உங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை சம்பந்தப்பட்ட அனுபவத்தை எழுதி அனுப்பிடுங்கள்.
🪄 இல்லையேல், உங்களுக்கு தெரிந்த யாராவது, எந்த உறவு முறையாகினும், இப்படியான தொந்தரவுக்கு ஆளாகி இருந்தால், அவர்கள் அனுபவித்த கஷ்டத்தை கூட தாராளமாக எழுதி அனுப்பிடலாம்.
🪄 அனுபவத்தை எழுதுகையில், பெயர் சொல்ல விரும்பாதோர் வேறு பெயர்கள், இடங்கள் என்று தேவையான மாற்றங்களோடு உங்கள் படைப்பை சமர்ப்பித்திடலாம்.
💌 போட்டிக்கான கால வரையறை: 01. 03. 2025 – 09. 03. 2025
🔏போட்டி விதிமுறைகள்:
🖊️ஒருவர் அவர்கள் கடந்து வந்த அல்லது கேள்விப்பட்ட பல அனுபவங்களை எழுதிடலாம்.
🖊️படைப்புகளை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டும்.
📌மின்னஞ்சல் குறிப்புகள்:
💎படைப்பாளர் பெயர்
💎தலைப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
💎அலைபேசி எண்
📌அனுபவங்களை Ms Word அல்லது ஈமெயிலில் நேரடியாக எழுதி அனுப்பிட வேண்டும்.
📌 போட்டி சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் கீழ்கண்ட புலன குழுவில் பகிரப்படும். ஆகவே, போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழிருக்கும் புலன குழுவில் இணைந்துக் கொள்ளவும்.
🔗 Aroobi Stop Abuse Story Group
📌500 வார்த்தைகளுக்கு மேற்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
📌எழுத்து பிழைகளை தவிர்த்து, வாக்கியத்தின் முடிவில் ஒற்றை புள்ளி வைத்து (single dot), தேவையான இடத்தில் கோமா (coma), மேற்கோள் குறிகள் (quotation) போட்டு, பத்தி (paragraph) முறையில் எழுதி அனுப்பிடவும்.
📌அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட அனைவருக்கும் மூன்று மாதத்திற்குள் பங்கேற்பாளர் மின்னியல் நற்சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.
📌அனுபவங்கள் அனைத்தும் மூன்று நாட்களுக்குள் அரூபி தளத்தில் பதிவிடப்படும்.
📌 அவைகளின் திரிகள் அரூபி தளத்தின் அதிகாரபூர்வ குழுக்களில் பகிரப்படும். இணையாதவர்கள் இணைந்துக் கொள்ளவும்.
🔗Aroobi Official What’s Application Channel
🔗Aroobi Official Tamil Website Facebook Page
🔗Aroobi Official Facebook Group
வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து உங்கள் ஆதரவை அரூபி தளத்திற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு அரூபி தளம் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
ஆகவே, போட்டிகளில் உற்சாகமாய் கலந்துக் கொண்டு தொடர்ந்து அரூபியோடு பயணிப்பீர்களாக.
பின்குறிப்பு: ‘யாவரும் வெற்றியாளரே!’ என்ற அங்கத்தில் இடம் பெரும் போட்டிகள், அரூபி தளத்தில் நடக்கின்ற, மற்ற மாதாந்திர போட்டிகளில் சேராது.
போட்டியை பற்றிய சந்தேகங்கள் இருப்பின் தனிப்பட்ட முறையில் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பி தெளிவுப்படுத்தி கொள்ளவும்.
உங்களைப் போலவே எழுத முயற்சிக்கும் மற்றும் முனைப்பு காண்பிக்கும் யாராகினும், அவர்களை அரூபிக்கு அறிமுகப்படுத்தி போட்டியில் பங்கெடுத்திட வழி வகுத்திடுங்கள்!
இலக்கியம் படைத்திடுங்கள்! தமிழை வளர்த்திடுங்கள்!
நன்றி. வணக்கம்.