பஞ்சபூதங்களின் ஏப்ரல்: இக்கரைக்கு  அக்கறை பச்சை

by admin 2
35 views

எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன்

தேர்வு செய்த தலைப்பு: ஆகாயம் 

பரமசிவனுக்கு  வயது  பதினைந்து .  பள்ளி இறுதி   தேர்வுகளை ஒரு வழியாக முடித்து  அடுத்து  கலோரி படிப்புக்கு தயாராகி  வரும் வேளையில்    அடிக்கடி   அந்த தெருவில்     சிலரது  வீடுகளில் நடக்கும் சண்டை களிலால்   மனது நொந்து   நிம்மதியை நாடி   அருகில் உள்ள கோவிலுக்கு  வந்தான் . 

இறைவனிடம்  மனம் உருகி ”   இறைவா ,   ஏன்தான் எங்கள் தெருவில்  இப்படி  எங்க  சொந்த காரங்க  அடிக்கடி  சண்டை போட்டுக்குறாங்க .

என்னால் நிம்மதியாக  படிக்கவே  முடிய வில்லை , 

பேசாமல்   என்னை ஆகாயத்திற்கு மாற்றி விடு , நிம்மதியாக  அங்கு போய்  விடுகிறேன் ” என்று மனம் உருகி  கண்களை மூடி   வேண்டியதும் , தீடீரென  ஒரு மின்னல் போல ஒரு உணர்வு  அவனுள்  ஏற்பட்டது .   

கண்  விழித்து பார்த்தால்  எங்கோ  ஒரு மர்ம  பிரதேசத்தில்   வந்தது போல உணர்வு ,  புரியாத  இடங்கள்,  அடையாளம் கண்டு கொள்ள இயலாத  ஜீவ ராசிகள் ,,,,,,அப்போதுதான் புரிந்தது , இறைவன்  அவனது கோரிக்கையை  ஏற்று அவனை  வானுலகிற்கு  அனுப்பி வைத்ததை …

வானுலகம்  ஒரு வித்யாசமான உணர்வை அவனுள்  ஏற்படுத்தியது ,

பசி, மற்றும் தாகம்  போன்ற உணர்வுகள்  அவனுக்கு வராதது கண்டு .

உடல் சோர்வும்  கூட ஏற்படவில்லை ,

அப்படியே  வானுலகில் வீதி வீதியாக   நடந்தானா  அல்லது பறந்தானா என்பது கூட  தெரிய வில்லை . 

வானுலகிற்கு  வந்து எத்தனை  நாட்கள்  ஆகியது என்ற  ஒரு கணக்கு கூட  அவனுக்கு  தெரியவில்லை ,  அம்மா, அப்பா  மற்றும் சொந்த பந்தங்கள்  இவைகளை கூட பார்க்க முடியாமல் போய் விட்டதே  என்று ஒரு கணம்  வருத்தமடைந்தான் , 

ஆகாய உலகில்    நிலவி வருவது பகலா , இரவா  என்பது கூட  தெரிய வில்லையே ?  இது என்ன   உலகம் ? . 

நம்ம பூமியில் இருக்கும் போது  அவ்வப்போது  சண்டை சச்சரவுகள்  இருந்தாலும்   அது ஒரு வித புது அனுபவம் . இறைவா ,  தெரியாமல்  உன்னிடம் வேண்டி கொண்டேன் , என்னை மீண்டும்   பூமிக்கே அனுப்பி வைத்துவிடு  ”   என்று மனம் உருகி  வேண்டி கொண்டான் .

அடுத்த  நொடியே மீண்டும் ஒரு  மின்னல் போல  உணர்வு  ஏற்பட்டது .

கண்  விழித்து பார்த்தால் அவன் அவனது  வீடு வாசலில் நின்று கொண்டிருக்க ,  பக்கத்துக்கு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும்  பதிவு போல  குப்பை  சண்டை  ….

இறைவா ,  எனக்கு இந்த  வாழ்க்கையே போதும்  என மீண்டும் வேண்டி கொண்டான் 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!