எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன்
தேர்வு செய்த தலைப்பு: ஆகாயம்
பரமசிவனுக்கு வயது பதினைந்து . பள்ளி இறுதி தேர்வுகளை ஒரு வழியாக முடித்து அடுத்து கலோரி படிப்புக்கு தயாராகி வரும் வேளையில் அடிக்கடி அந்த தெருவில் சிலரது வீடுகளில் நடக்கும் சண்டை களிலால் மனது நொந்து நிம்மதியை நாடி அருகில் உள்ள கோவிலுக்கு வந்தான் .
இறைவனிடம் மனம் உருகி ” இறைவா , ஏன்தான் எங்கள் தெருவில் இப்படி எங்க சொந்த காரங்க அடிக்கடி சண்டை போட்டுக்குறாங்க .
என்னால் நிம்மதியாக படிக்கவே முடிய வில்லை ,
பேசாமல் என்னை ஆகாயத்திற்கு மாற்றி விடு , நிம்மதியாக அங்கு போய் விடுகிறேன் ” என்று மனம் உருகி கண்களை மூடி வேண்டியதும் , தீடீரென ஒரு மின்னல் போல ஒரு உணர்வு அவனுள் ஏற்பட்டது .
கண் விழித்து பார்த்தால் எங்கோ ஒரு மர்ம பிரதேசத்தில் வந்தது போல உணர்வு , புரியாத இடங்கள், அடையாளம் கண்டு கொள்ள இயலாத ஜீவ ராசிகள் ,,,,,,அப்போதுதான் புரிந்தது , இறைவன் அவனது கோரிக்கையை ஏற்று அவனை வானுலகிற்கு அனுப்பி வைத்ததை …
வானுலகம் ஒரு வித்யாசமான உணர்வை அவனுள் ஏற்படுத்தியது ,
பசி, மற்றும் தாகம் போன்ற உணர்வுகள் அவனுக்கு வராதது கண்டு .
உடல் சோர்வும் கூட ஏற்படவில்லை ,
அப்படியே வானுலகில் வீதி வீதியாக நடந்தானா அல்லது பறந்தானா என்பது கூட தெரிய வில்லை .
வானுலகிற்கு வந்து எத்தனை நாட்கள் ஆகியது என்ற ஒரு கணக்கு கூட அவனுக்கு தெரியவில்லை , அம்மா, அப்பா மற்றும் சொந்த பந்தங்கள் இவைகளை கூட பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று ஒரு கணம் வருத்தமடைந்தான் ,
ஆகாய உலகில் நிலவி வருவது பகலா , இரவா என்பது கூட தெரிய வில்லையே ? இது என்ன உலகம் ? .
நம்ம பூமியில் இருக்கும் போது அவ்வப்போது சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அது ஒரு வித புது அனுபவம் . இறைவா , தெரியாமல் உன்னிடம் வேண்டி கொண்டேன் , என்னை மீண்டும் பூமிக்கே அனுப்பி வைத்துவிடு ” என்று மனம் உருகி வேண்டி கொண்டான் .
அடுத்த நொடியே மீண்டும் ஒரு மின்னல் போல உணர்வு ஏற்பட்டது .
கண் விழித்து பார்த்தால் அவன் அவனது வீடு வாசலில் நின்று கொண்டிருக்க , பக்கத்துக்கு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் பதிவு போல குப்பை சண்டை ….
இறைவா , எனக்கு இந்த வாழ்க்கையே போதும் என மீண்டும் வேண்டி கொண்டான்
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.