பஞ்சபூதங்களின் ஏப்ரல்: தண்ணீர் தண்ணீர்

by admin 2
81 views

எழுதியவர்:  நா .குருமூர்த்தி 

தேர்வு செய்த தலைப்பு: நீர் 

ஸ்… அப்பா. என்ன வெய்யிலுப்பா

ஆபீஸிலிருந்து வந்த சீனு தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டான். மனைவி கொண்டு வந்த அந்த குளிர்ந்த லெமன் ஜூஸை அருந்திக் கொண்டே, தாங்க்ஸ், ஜானகி என்றான்.
இந்த வெய்யில் காலத்தை எப்படி சமாளிக்கறதுன்னே தெரியலை என்றான். ட்ரெயின்லயும், பஸ்லையும் கஷடப்பட்டுக்கிட்டு.. , இந்த வெய்யில் காலத்துக்கு மட்டுமாவது WFH கொடுத்தா தேவலை. எங்க புரியுது அவங்களுக்கு, என்றான். மழை காலமே தேவலாம் போல என்றான்.
மனைவியும், ஒரு விதத்தில் நீங்க சொல்வதம் சரிதான். ஆனா மழை வந்தா கூட சந்தோஷமாவா போறீங்க. அப்பவும் எதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தானே செய்யுது. பள்ளம், மேடு எதுன்னு தெரியலை, டிரெயின், பஸ்செல்லாம் ஒழுங்கா வரதில்லை. நீங்க போயிட்டு வீடு வந்து சேருகிற வரைக்கும் பயமா இருக்குல்ல, என்றாள் ஜானகி. நமக்காவது, நம்ம பிரச்சனையை பேச முடியுது. நம்ம தோட்டத்துல வர புறாவெல்லாம் பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்குங்க. அதுகளுக்கு யார் தண்ணீர் எடுத்து குடுப்பா.

ஆமாம் நீ சொல்லறதும் சரிதான். அதுகளுக்கும் நாம தினமும் தண்ணீர் வைக்கனும். எனக்கு இது தோணலையே, என்று வருத்தப்பட்டான். நாளைக்கு நீயே அதுக்கு ஒரு மண் சட்டி வங்கி வந்துடு என்றான்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு இரவு உணவு முடித்தபின், மனைவி, குழந்தைகள் உறங்கி போனார்கள்.
இவன் மட்டும் ஆபீஸ் நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்தான். இரவு உறங்க போகும் முன், நாளை முதல் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அந்த நினைப்பே அவனை தண்ணீர் குடிக்க தூண்டியது.

மற்றவர்கள் முன்னமே உறங்கி போயிருந்தார்கள். எழுந்து போக மனமில்லாமல், அப்படியே அசதி மிகுதியில் உறங்கி போனான். தண்ணீர் குடிக்காமல் அதே நினைப்புடன் உறங்கி போனதால், இரவு தண்ணீரை தேடி அவன் ஆன்மா அலைந்தது. வீட்டில் மூடப்படாமலே இருந்த அந்த தண்ணீர் பானைக்குள் நுழைந்தது.
அதே சமயத்தில், பாதி துக்கத்தில் விழித்துக் கொண்ட அவன் மனைவி, இயற்கை உபாதையை முடிக்க எழுந்தவள், அப்படியே திறந்திருந்த தண்ணீர் பானையை மூடிவிட்டு, மீண்டும் உறங்க சென்றாள்.
மறு நாள் காலை விடிந்தது. இவ்வளவு நேரம் விழிக்காமல் இருந்த கணவனை எழுப்ப சென்றவள், அசைவற்று கிடந்ததால், “ஓ”-வென அலறி என்ன செய்வதென்று தெரியாமல், தண்ணீர் கொண்டு வர , தண்ணீர் பானையை நோக்கி ஓடினாள். பானையை திறந்து தண்ணீர் எடுத்து வரவும், அதற்குள் அதனுள் முடங்கி இருந்த அவன் ஆன்மா விடுதலை பெற்று, அவன் உடலை தேடி சென்றடைந்தது.
இவள் சென்று தண்ணீரை தெளிக்கவும், அவன் அதிர்ச்சி மிகுதியில் எழவும்,… சந்தோஷத்தில், கண்ணில் தாரை தாரையாக வழிந்தது. என்னங்க, என்ன ஆச்சு என்றாள்.
அவன், தண்ணீர், தண்ணீர் என்று மட்டுமே சொல்லத் தெரிந்தது. குடிக்க தண்ணீர் குடுத்தாள்.

இன்னிக்கு போய் அந்த மண் சட்டியை மறக்காம வாங்கிட்டு வந்துடு, என்றான். சரிங்க, முதல்ல வாங்க முதல்ல டாக்டர் கிட்ட போகலாம் என்றாள்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!