செவ்வான வனம் கதை போட்டி: வனபேசி வானொலி நிலையம் பாகம் 1

by admin 2
13 views

எழுதியவர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல்

வனபேசி வானொலி நிலையம். வணக்கம்.செய்திகள் வாசிப்பது குயிலக்கா. 

நம் வனப்பகுதியில் வறண்ட சூழ்நிலை காணப்படுகின்றது.இந்த கோடையில் நம் மனிதர்களுக்கு குடிதண்ணீர் கிடைப்பது சிரமமாக உள்ளது.இதற்கு காரணம்,சென்ற வருடம் சுமார் நூறு அடி வளர்ந்த ஆயிரம் மரங்களை, நாட்டிலுள்ள மனித மிருகங்கள் இயந்திரங்களை கொண்டு அழித்து, அடியோடு கொண்டு சென்று விட்டதால் பருவமழை தவறிவிட்டது என்று நம் சிம்ம ராஜா அறிவித்துள்ளார். 

மேலும் இந்த வருடம் நம் காட்டிலாக்கா அதிகாரிகள் எல்லையோர வனப்பகுதிகளை அதிக யானைகள், சிங்கங்கள்,புலிகள்,சிறுத்தைகள் கொண்டு, இரவு பகலாக காவல் காக்க நம் சிம்ம ராஜா ஆணையிட்டுள்ளார்.அவ்வப்போது அதிக சப்தமிட்டு மனித மிருகங்களை விரட்டி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இன்றிரவு, மழை பொழிய வேண்டி ஒரு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும் என்றும்,நம் மக்கள் எல்லோரும் தவறாமல் கலந்து கொண்டு இறைவனிடம் மன்றாட வேண்டும் என்றும், நம் சிம்ம ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இத்துடன் செய்திகள் நிறைவு பெற்றது.அடுத்த செய்திகள் நாளை மதியம் ஒளிபரப்பப்படும்.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!