- பாத தரிசனம் *
செந்தாமரை இதழாய்
பாத தரிசனம் கண்டு
பிறவிப் பயன்
அடைந்துவிட்டேன்,;
என் நாடி துடிப்பில்,
உன் இதய துடிப்பு
தொடங்கிய நிமிடம் முதல்
உனை உயிருக்குள் அடைகாத்து;
உனை ஈன்றெடுக்கவே இப்பிறவி
எடுத்த அர்த்தம் உணர்ந்தேன்;
ஒரு பிறவியில் மறு ஜென்மத்தை
உன் பிறப்பில் உணர்ந்தேன்;
உலகே வியந்து பார்க்க இருக்கும்
உன் பாதங்களின் முதல்
நடைமேடை என் இதழ்களே,,!
கடவுளை உணர்ந்தவர்
பலர் இருப்பின்,
கண்ணால் கண்ட பாக்கியம்
உன் பாத தரிசனம் எனக்கு
கிடைத்த நிமிடம்,!
இப்பிறவி பலன் அடைந்த
முழு மனதுடன்…!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
