காவலுக்கான அலமாரிக்கதவு கண்திரையாகிகண்டதை காணாது மறைத்தினும்திரைமறைவு திசை மாறும்போதெல்லாம்முந்திக்கொண்டு அகம் காட்டுகிறதுஅழுத்தி அமுக்கிவைத்த அவயங்களாவும்முகமூடிக்குள் அழுந்திக்கிடக்கும் மெய்முகமாய்! புனிதா பார்த்திபன்
நவம்பர்
தஞ்சமென வந்தமர்ந்தஎப்பொருளாயினும் ஏற்றுபத்திரமாய்ப் பாதுகாத்துஅரணாய் அமர்ந்துமதிலோரத்தில் ஓரமாய்ஒதுக்கப்பட்டாலும் ஒய்யாரமாகிபுறமுகம் காட்டாமல்ஓயாது உழைக்கும்அகத்தினுள்ளே அமைதியாய்ஆரவாரம் ஒழித்துப்பணியாற்றும் சேவைஇல்லமதற்குத் தேவை ஆதி தனபால்
அலசிப்போட்ட துணிகளினை கசங்கலின்றி மடித்தேஅட்டைப்பெட்டிக்குள் அடுக்கிய ஏழை சிறுமிபலமா(தி)ரி கனவுகள் கண்டதுண்டு கற்பனையிலேஅலமாரி ஒன்றிருந்தால் அடுக்கிடலாம் அழகழகாயென பலதுணிகள் தனக்கில்லை உடுத்திட…
ஓ…! அலமாரிஉடைகள்உள்ளபெட்டியல்ல…. அதுபணம்உள்ளதும்இல்லை…. அதுநகைப்பெட்டியும்அல்ல…. பின்என்ன…? கோயிலுக்குசமம்..! ஆம். அதன்பொக்கிஷம்புத்தகம்…! புத்தகஅலமாரிசின்னபல்கலைக்கழகம்! ஆர் சத்திய நாராயணன்
ஆடைகள், பணத்திற்குமட்டுமல்ல;ஆபரணங்கள் பாதுகாத்துவைத்திடவும்;ஆவணங்களின் ரகசியஇடமாகவும்அரிய பொருட்களின்பெட்டகமாகவும்இன்னும் நம்பிக்கையின்சின்னமாகஇரும்பு, மரத்தாலானஇதயமாகஇல்லம், அலுவலகத்தில்நின்றிருக்கும் …இணையிலா அஃறிணைஅலமாரியே… “சோழா” புகழேந்தி
அழகாக அடுக்க வைத்துவரிசையாக நிற்க கற்றுக் கொடுக்கிறாய் !கதவுகளால் மூடிக்கொண்டுபாதுகாக்க கற்றுக்கொடுக்கிறாய் !அடுக்குகளை மாற்றியமைத்துமாற்றத்தை ஏற்க கற்றுக் கொடுக்கிறாய் !பழையப் பொருட்களை…
சேமிப்பு கிடங்கா இந்த மனம்!நினைவடுக்கில் நல்லவைகளை சேமித்து வைப்போம்!குப்பைகளை கொண்டு கொட்டும் வெளியே!மழலையின் பசுமையை மனதில் பதிப்போம்!இளமை காதலை என்றும் நினைப்போம்!வெறுப்பலைகளை…
