மனதின் ரணங்கள் வெள்ளைத்தாளில் வார்த்தைகள் சுமந்து வரிகளாய்விழிகள் சொரிந்த துளியில் கலைந்த எழுத்துக்கள் மங்கலாய்….ஊமை வலிகள் மட்டுமே நீங்கா நினைவாய் நெஞ்சில்…
நவம்பர்
எண்ணத்தை பிரதிபலிக்கும் ஆயுதம்.எதிர்கால சந்ததிக்குஆவணம்.கல்விக்கு வழிகாட்டும் சாசனம்.கற்போர்க்கு வேண்டுமிந்த சீதனம்.அச்சு ஊடகங்களின் இதயம்அலங்கார பூக்களெனஉதயம்.கறையானுக்கு பிடித்தமான உணவு.காதலரை இணைத்திடும்உணர்வு.ஓவியம்,கதைகளின்காவியம்.உழைப்புக்கு ஊதியமாகும் காகிதம்…
கண்ணெதிரே வந்தமரும்தேவதை!கரங்களில் மலர்ந்திடும் பூவிதை !எவரெனக்கு நிகரெனும்அகந்தை.எல்லோரும் கொஞ்சிடும்குழந்தை!புவனத்தை வசமாக்கும்சலனம்.புரட்சிக்கு தூண்டிடும்புலனம். “சோழா ” புகழேந்தி
இத்தலைமுறை ஆக்கம் வித்தாய்அத்தற்று வெத்துப்பேச்சை சித்தமாக்கினும்பித்தாகியது முத்தலைமுறை மூத்தோரேஉத்தவருடன் ஒத்துப்பேசவென நித்தம் சிரத்தை குனித்த கோலத்தைபெயர்த்தி குறைத்திடினும் தாத்தனுக்கியன்றிடுமோ! புனிதா பார்த்திபன்
விழிப் புயலில் மையம்நகர்ந்து செல்ல மனமில்லைகட்டைவிரலுக்கும் கத்தையாகவேலைவரவிநாடிகளுக்குள் தூளியாடித் தகவல்கள் புலனமெனும் புதிருக்குள்ஒளிந்திருந்தது காலத்தின் சாலையெங்கும்புதுவரவாய்!! ஆதி தனபால்
புலனுக்குள் புலனாகா புதியனவும்புலப்படுத்தியே புலம்பெயர்த்தும் பதியாகுமேபுலனடக்கியே பலனடைவோம் அதிமிகவாய் பலனுளதாக்கிடவே சலனமின்றியே அதிலிணைவோம்புலம்பவும் சலம்பவும் கதியிதுவோபலமிதுவாக்கிடவே பலப்பலவாய் விதியாக்கிடுவோமே.. *குமரியின்கவி* *சந்திரனின்…
புதிய தகவல்கள் புலத்தின்வழியாக வந்தே சேருதேஉணர்வினைப் பரிமாறும் தூதனானதேதூரத்தில் இருந்தாலும் நெருங்கிடவைக்குதே காணொளிகள் கண்டுகளித்திட வைத்திடும் சமூகவலைத்தளம் அற்புதராசா பிரார்த்தனா
