கொடிது கொடிது வறுமை நெடிது இளமையில் வறுமை ஆட்சிகள் மாறியும் தொடரும்காட்சிகள் வறுமை இடரும்இருப்பது பொதுவாய்ப் போதலில்துறப்பது வறுமை ஆதலில் …பெரணமல்லூர்…
Tag:
வாரம் நாலு கவி
இல்லாததை எண்ணி உழன்றுஇருப்போனின் இகழ்ச்சி தாங்கிகைசேரா கனவுகளின் அழுத்தத்தில்ஒருநொடி வீறிட்டெழும் உறுதியில்உடைந்து நொறுங்கிடும் வறுமைஉயர்வின் உன்னத அஸ்திவாரமே! புனிதா பார்த்திபன்
ஓட்டைவீட்டில் பரிதியே வெளிச்சம்…மழையே நீராடவும் குடிநீரும்…கந்தலாடையின் நறுமணத்திரவியமே மண்வாசனை…அரைவயிற்றுக் கஞ்சியே பேரமிர்தம்…எந்நிலையிலும் இளமையில் கல்வி…வறுமையின் எளிமை வடிவமிதே…! ✍அனுஷாடேவிட்
இடியாப்பம் கறிக்குழம்பு வகைகளுடன் பிரியாணியும் பிறவுணவு வகைகளெனவிதவிதமாய் உண்டவர்கள் வீணாக்கியதைகுப்பையிலிட்டுகழுவியே சுத்தமாக்கியவள் விடைபெற்று வீடு வந்து பசித்தவயிறுக்கு பழங்கஞ்சி பருகினாள் *குமரியின்கவி*…
