ஒரு நாள் போட்டி கதை: கனவால் தோன்றிய வேண்டுதல்

by admin 2
72 views

எழுதியவர்: சு.சுமிதா

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு

அன்று கணிகை அலுவலகத்திற்கு செல்ல மிகவும் தாமதமானதால்,பதற்றத்துடன் பேருந்து நிலையம் நோக்கி விரைந்தாள்.அன்றைக்கு பார்த்து பேருந்து நிலையத்தில் எந்த பேருந்தும் அந்த நேரத்தில் வரவில்லை.பதற்றத்தில் இருந்த கணிகை என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாமல் குழம்பினால்.அப்போது,அந்தப் பக்கம் வந்த ஆட்டோவில் சென்று விடலாம் என்று எண்ணி ஆட்டோவில் ஏறி வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்று கூறினால். சரி வாம்மா போலாம் என்று ஆட்டோ அண்ணா வண்டியை முறுக்கினார். பிறகு அண்ணா,சற்று வேகமாக ஓட்டங்கள் அண்ணா எனது அலுவலகத்தில் இன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதற்கு நான் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் கணிகை.ஆட்டோ அண்ணா சரிமா வேகமாக செல்கிறேன் என்றார். நான் எனது தொலைபேசியை பார்த்துக் கொண்டே ஆட்டோவில் சென்ற போது ஆட்டோக்கார அண்ணா ஒரு பெண் நிற்கிறார் அவர்களை நம்முடன் ஏற்றிச்செல்வோமா என்றார் ஆட்டோ அண்ணா.வேண்டாம் எனக்கு அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று கூறினால் கணிகை. அப்போது ஆட்டோக்காரர் அண்ணா அவர் கர்ப்பிணி பெண் அம்மா எப்படி ஏற்றாமல் செல்வது அம்மா என்றார். என் மனதிற்குள் கலக்கம் ஏற்பட்டது ஐயோ இப்படி சொல்லி விட்டோமே என்று  வருத்தப்பட்டு சரி அண்ணா நிறுத்துங்கள் கூட்டிக்கொண்டு செல்வோம் என்றாள் கணிகை. ஆட்டோவில் அந்தப் பெண்மணி  ஏறின உடனே என்னைப் பார்த்து  சிறு புன்னகைத்தார் நானும் புன்னகையித்தேன். சில நொடிகள் கழித்து என் மனம் என்னையே கேள்வி கேட்டது நான் ஏன் இப்படி  நடந்து கொண்டேன் என்று.நிறுத்த வேண்டாம் என்று சரியாக கவனிக்காமல் கூறி விட்டேனே என்ற வருத்தத்துடன் என் மனதிற்குள்ளே வருத்தமடைந்தேன். ஆட்டோவில் ஏறிய பெண் தான் கொண்டு வந்த பையை திறந்து ஒரு நோட்டை எடுத்து ஏதோ எழுத ஆரம்பித்தார் ஏதோ சிந்தித்துக் கொண்டே எழுதிக் கொண்டு இருந்தார் நான் வியந்து பார்த்தேன். ஏனோ தெரியல சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணுக்கு வேர்வை அதிகமாக வந்தது முகமும் மாறியபடி இருந்தது. சிறிது நேரத்திலேயே ஆ அம்மா என்று அலற ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்து கணிகைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அம்மா என்னாச்சு ஏன் இப்படி அழறீங்க என்று கேட்டாள்… அதற்கு அவர் என்னால் வழலி தாங்க முடியவில்லை என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமா  என்று கேட்டார். ஆட்டோக்கார அண்ணா விரைந்து மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறினால் கணிகை.போகும் வழியில் அந்தப் பெண் தனக்கு கணவன் மட்டும் தான் அப்பா அம்மா மாமா மாமியார் என்று யாரும் இல்லை நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம் என் மதமும் அவருடைய மதமும் வேறு என்பதால் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் நாங்களே திருமணம் செய்து கொண்டு தனியே வாழ்ந்து வந்தோம். தற்போது என் கணவர் மலேசியாவிற்கு சென்று ஆறு மாதமாகிறது.இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடுவார். இந்த பையில் உள்ள போனை எடுத்து எனது கணவருக்கு தகவலை தெரிவித்து விடுங்கள் தயவு செய்து தெரிவித்து விடுங்கள் என்று அழுத குரலில் கேட்டார். நான் ஒப்புக்கொண்டேன். சற்று நேரத்தில் என்னவோ தெரியவில்லை அவர் மயங்கிவிட்டார். கணிகைமேலும் பதற்றம் அடைந்தாள். மருத்துவமனையில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்தாள். அங்கிருந்த செவிலி ஒருவர் இவரின் பெயர் மற்றும் கணவரின் பெயர் என்னவென்று கணிகையிடம் கேட்டார் .எனக்கு தெரியாது என்று கூறினாள். என்ன கூட வந்தவர்களை பற்றி தெரியாது என்கிறீர்கள் யார் நீங்கள் என்று கேட்டார். ஆட்டோவில் வரும் பொழுது இப்படி ஆச்சும்மா என்று கூறினேன். சரி இப்போ என்ன செய்வது அவரின் பையில் தொலைபேசி இருந்தால் அவரது கணவருக்கு தகவல் தெரிவியுங்கள் இங்கே வரட்டும் என்றார் செவிலி. கணிகை பையைத் திறந்து ஃபோனை எடுத்து அவர் சொன்னதைப் போல அவரது கணவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள் கணிகை.அவர் மலேசியாவில் உள்ளதால் கணிகையால் அலைபேசியில் அழைக்க முடியவில்லை .அதனால்,வாட்ஸ் அப்பில் அவருக்கு கால் செய்தாள். அவரும் எடுத்தார் இது மாதிரி ஆகிவிட்டது என்று கூறினாள் கணிகை.அவர் பதறிப் போய் எங்களுக்கு யாருமே இல்லை தயவு செய்து என் மனைவியை பார்த்துக் கொள்ளுங்கள் நாளை நான் வந்து விடுகிறேன் என்றார் எழிலன்.  உங்கள் மனைவியின் பெயர் என்னவென்று கேட்டாள் கணிகை.அவள் பெயர் நோயல்இனியா என்று கூறினார் எழிலன்.சரிங்க சார் நீங்க சீக்கிரமா வர பாருங்க என்றாள் கணிகை. செவிலியிடம் அவர்களைப் பற்றிய தகவல்களை கூறிவிட்டு அமர்ந்திருந்தாள்.அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்தது ஐய்யய்யோ இன்று அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருப்பதை மறந்து விட்டேனே என்று பதறிப் போனாலள் கணிகை. தன் தோழி சுடர்விழிக்கு கால் செய்து இப்படி ஆகிவிட்டது நீயே அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்து விடு என்று கூறினாள் கணிகை. நான் விடுமுறை என்பதையும் மேலதிகாரியிடம் தெரிவித்து விடு என்றாள் .விடுமுறையை சொல்லிவிட்டு அமைதியாக வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருந்திருந்தாள். அப்போது மருத்துவர் வந்தார். ஐயா குழந்தை பிறந்ததா என்ன குழந்தைங்க ஐயா ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று வியப்புடன் கேட்டாள் கணிகை. அதற்கு மருத்துவர் சற்று பொறுங்கள் அம்மா அவர் குழந்தை பெறாமலேயே இறந்து போய்விட்டார் என்றார். அதைக் கேட்டதும் என் தலையில் ஏதோ இடி விழுந்தது போல பதறி அழுதேன் அட கடவுளே! ஏன் இந்த நிலைமை இந்த பெண்ணுக்கு இப்படி என்று அழுதேன், கதறினேன். அவர் கணவர் நாளை தானே வருவார் இப்பொழுது என்ன செய்வது இவரை என்று தெரியாமல் நடுக்காட்டில் வழி தெரியாமல் நின்றது போல் நின்றால் கணிகை. அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தால் வரும் வழியில் அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமும் கணிகை மனதில் எழுந்தது. சூழ்நிலையை எப்படி நான் சமாளிப்பது என்று கணிகைக்கு தெரியவில்லை. மருத்துவரிடம் சென்று சார் இவர் கணவர் நாளை தான் சார் வருவார் அதுவரை மருத்துவமனையில் இவரை வைத்திருக்க முடியுமா? என்று கேட்டாள் கணிகை மருத்துவரும் சரி மா என்று சொன்னார். நான் விட்டுச் செல்லவும் மனம் இல்லாமல் தவித்து நின்றேன். எனது வீட்டுக்கு தகவல் தெரிவித்தேன் இப்படி ஆகிவிட்டது என்று. அவர்களை எப்படியோ பேசி நான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன் அவர் கணவர் வரும் வரரையில் என்று சம்மதிக்க வைத்தார் கணிகை. இனியாவை பார்ப்போம் என்று அவர் இருந்த அறைக்குச் சென்று பார்த்தால் கணிகை. அவரைப் பார்த்த அந்த நொடி கணிகை கண்ணில் தன்னை அறியாமல் பீறிட்டு வழிந்தது கண்ணீர். யாரோ ஒருவர்தான் ஆனாலும் கண்ணீர் வழிந்தது. அவரைப் பிரிந்து செல்ல மனம் இல்லாததற்கு காரணம் தன் தங்கை அருவி இறந்தபோது யாருமே பக்கத்தில் இல்லாமல் அடுத்த நாள் சென்ற  அந்தத் தாக்கம் அவளுக்கு இருந்தது. தன் தங்கையாக பார்த்தாள்.தன் தங்கையை கூட வ இருந்து பார்த்துக்கொள்ள முடியாதா அவளுக்கு சரி இனியாவையாவது கூட இருந்து பார்த்துபக்கொள்வோம் என்ற எண்ணம் எழுந்தது. அருகில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் கணிகை. கணிகைக்கு சில கேள்விகளும் போராட்டங்களும் எழுந்தன. இவர் குழந்தையின் கனவுகளைப் பற்றியும் அந்த குழந்தையின் எதிர்காலத்தை பற்றியும் தாங்கள்  அம்மா அப்பா ஆன சந்தோஷத்தையும் கொண்டாட எவ்வளவு காத்திருந்துப்பார் என்று எண்ணியதும்  கணிகை கண்ணின் ஓரத்தில் நீர் வழியத் தொடங்கியது அவர் ஆட்டோவில் ஏறிய போது ஏதோ எழுதிக் கொண்டிருந்த ஞாபகம் எனக்குள்ளே வந்தது சரி என்னதான் எழுதினார் என்று படித்துப் பார்ப்போம் என்று அந்த நோட்டை எடுத்து பார்த்தாள். அதில் அவர்கள் எப்படி காதலித்தனர் என்றும் தாங்கள் வேறு வேறு மதம் என்பதால் குடும்பம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது எல்லாம் எழுதி இருந்தார். அவர்கள் காதல் திருமணம் செய்து 5 வருட காலமாக மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததை ஒவ்வொரு கவிதையாக தெரிவித்திருந்தார். கவிதை எழுதுவதில் தேர்ந்தவர் போலும். மிக அழகான கவிதைகள் வலிகள் நிறைந்த கவிதைகள். ஆழ்மனதில் ஏதோ என் எண்ணத்தை ஈர்த்தது. சந்தோஷமான கவிதை படிக்கும்போது நானும் சந்தோஷமாக திரும்பி சோகமான கவிதைகளை படிக்கும் பொழுது ஏனோ இனம் புரியாத சோகம் அப்படி ஒரு கவிதையை நான் இன்று வரையிலும் வாசித்தது இல்லை. சில உருக்கமான பகுதிகளும் இருந்தன தங்கள் அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் பழக வேண்டும் தன் பிள்ளையை எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு வைத்திருந்தார். அதை படித்த போது என் கண்களில் ஆராய் நீர் பாய்ந்தது .இப்படி எல்லாம் கனவு கண்டவருக்கு இப்படி நிகழ்ந்தது என்று என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னால் அதுக்கு மேல அந்த டைரியை புரட்டவே முடியவில்லை. அந்த டைரியை எடுத்து அவர்கள் பையிலே வைத்துவிட்டு சிறிது நேரம் வெளியே வந்து அமர்ந்திருந்தேன். கடவுளே இந்த மாதிரி யாருக்கும் நடக்க கூடாது எவ்வளவு கனவுகளுடன் இருந்து அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?… குழந்தையும் இனியாவும் உயிருடன் இருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும். ஐந்து வருட காலமாக குழந்தை இல்லை என்று அவர் பட்ட துன்பத்தை யாவது அவர் மறந்திருந்திருப்பார். அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து அவர் எவ்வளவு ஆனந்தம் அடைந்திருப்பார். என் மனப்போராட்டம் அதிகமாகிவிட்டது. இதற்கு மேல் இந்த இடத்தில் என்னால் இருக்க முடியுமா என்று மேலும் கலக்கமடைந்தேன். அன்று இரவு ஒவ்வொரு நொடியும் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ..அடுத்த நாள் காலை 9 மணி அளவில் அவர் கணவர் வந்து என் மனைவி இனியா எங்கே என்று கேட்டார் . குழந்தை பிறந்து விட்டதா என்ன குழந்தை பிறந்து இருக்கிறது என்று ஆவலோடு கேட்டார் அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. அதைப் பார்த்து மேலும் கலக்கம் அடைந்தேன். இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அவரிடம் எப்படி நான் உங்கள் மனைவி கர்ப்பிணியாகவே இறந்துவிட்டார் என்று கூறுவேன். இருவரில் ஒருவராவது இருந்திருந்தால் அவருக்கு கொஞ்சமாவது ஆறுதலாக இருந்திருக்கும் இருவருமே இல்லை என்று அவரிடம் நான் எப்படி கூறுவேன் என்று என்னுள் ஆயிரம் போராட்டம் ஏற்பட்டது… சரி சொல்லி தான் ஆக வேண்டும் என்று மனதை தைரியப்படுத்திக் கொண்டு அவரிடம் எழிலன் மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி தங்கள் மனைவி கர்ப்பிணியாகவே இறந்துவிட்டார் என்றால் கணிகை. ஐயோ அம்மா என்ன சொல்றீங்க என்னால் இது நம்பவே முடியாது என் மனைவி என்னை விட்டு எப்பொழுதும் பிரியமாட்டாள். எங்கே அவள் அவள் உயிரோடுதான் இருப்பாள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது எங்கே என் மனைவி காட்டுங்கள் நான் பார்க்க வேண்டும் என்றார் எழிலன். செய்வது அறியாது அவரை அந்த அறைக்கு அழைத்துச் சென்றேன். தன் மனைவி படுத்திருந்ததை பார்த்து அருகில் சென்று இனியா இனியா எழுந்திரு இனியா என்று கூறினார் எழிலன். எழுப்பிப்பார்த்தால் அவர் எழுவேயில்லை அப்பொழுதுதான் நான் உண்மையை சொல்கிறேன் என்று அவருக்கு தெரிந்தது…. ஆஆஆ  என்ற பேரொலியுடன் கதறி அழுதார்.. இனிமேல் யாருமே இல்லையா இந்த உலகத்தில் என்று கதறி கதறி அழுதார் எழிலன்….. அவரிடம் இனியாவை ஒப்படைத்து விட்டு எனது வீட்டுக்கு செல்லலாம் என்று புறப்பட்டேன்…. இறந்த கர்ப்பிணியுடன்  ஒரு நாள்… அந்நாளில் எத்தனை மனப்போராட்டத்தை அனுபவித்தால் கணிகை…. ஏய் கணிகை ஏய் கணிகை என்று குரல் கேட்டது… ஏய் கணிகை எழுந்திரு என்று கேட்டது… தூக்கத்தில் இருந்து கணிகை எழுந்தாள்… தூக்கத்தில் இருந்து எழுந்த கணிகை கனவா …கனவே இவ்வளவு கொடூரமா இருக்கே… உண்மையில் யாருக்கும் இது மாதிரி நடக்க கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள் கணிகை.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!