காதல் பேசும் பிப்ரவரி: அடோனிசின் இரத்தத்தால் சிகப்பு ரோஜாக்கள் உருவான கதை

by admin 2
101 views

எழுதியவர்: அ.ஈடித் ரேனா 

அழகின் வடிவம் அன்பின் உருவம் காமத்தின் ஊற்று காதலின் தேவதை அவள் தான் அப்ரோடைட் 

கிரேக்க கடவுளர்களுக்குள்  கடும் சண்டை அப்ரோடைட்டின் அன்பை யார் பெறுவதென்று 

காதலின் கடவுளுக்கோ ஆசையின் கடவுளான அடோனிஸ் மீதே மையல் 

உலகம் தோன்றிய  போதே காதலும் காதல் தோன்றிய போதே சூழ்ச்சியும் தோன்றியிருக்க வேண்டும்.

வேட்டையில் சிறந்தவனை தாக்கியது காட்டுப்பன்றியா வஞ்சமா என்பது வரலாற்றுக்கே  வெளிச்சம் 

காதலனைக் கையில் ஏந்திக் கதறினாள் அப்ரோடைட் அவளின் ஒவ்வொரு துளி கண்ணீரும்  அவள் காதலனின் ஒவ்வொரு துளி உதிரத்தோடு சேர்கையில்  ஒவ்வொரு இதழாக தோன்றிக்கொண்டே இருந்தது.

இரத்தச் சிவப்பில் முழுமையான அனிமொன் பூ உருவான போது முற்றிலும் இறந்திருந்தான் அடோனிஸ் 

அனிமொன் மலர் ரோஜாவென அழைக்கப்பட்டதும்  காதலின் சின்னமானதும் பிற்கால வரலாறு.

(கிரேக்க புராணம் சொல்லும் இந்த புனைவு கதையை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். 

உன்னை விட சிறந்த ரோஜா உலகத்திலேயே இல்லை என்ற வகை உருட்டுகள்தான் இன்றளவும் காதலை வாழவைத்துக் கொண்டிருப்பதால் இந்தக் கதையையும் நம்பித் தொலைக்கலாம் )

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!