எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
அன்பு நெஞ்சங்களே…! நான் மீனா மற்றும் என் காதலர் ரவியும் இருவரும் வரும் பிப்ரவரி 14 அன்று சென்னை ஆழ்வார் திருநகரில் குகா கல்யாண மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்து உள்ளோம்.
இது ஒரு சீர்திருத்த திருமணம்.
காலை 9 மணி : சிற்றுண்டி
காலை 10 மணி: மாலை மாற்றுதல்
காலை 10.30 : தாலி கட்டுவது.
காலை 11 மணி : மணமகன் உறுதி மொழி. மணமகள் உறுதி மொழி.
காலை 11.30 : டீ மற்றும் குளிர் பானம்
காலை 12 மணி: பிரபலங்களின் வாழ்த்துரை..! உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துரை..!!
பிற்பகல் 12.30 : மணமகன் நன்றி உரை மணமகள் நன்றி உரை.
பிற்பகல் 1 மணி: விருந்து. போடப்படும். அது தடபுடலாக இருக்கும்…!!
பிற்பகல் 3 மணி : மணமகன் கபிலன் மற்றும் மணமகள் மீனா இருவரும் சேர்ந்து எழுதிய ” காதலே. வா… வா…! ” என்ற புத்தகம் எல்லோருக்கும் அன்புடன் வழங்க படும். இது பரிசு அல்ல. இது பொக்கிஷம்.
இறுதியாக…. நாங்கள் உங்களிடம் எந்த பரிசையும் பெற விரும்ப வில்லை. உங்கள் வாழ்த்தை மட்டுமே எதிர் பார்கிறோம். எல்லோரும் வாருங்கள்…! எங்களை வாழ்த்துங்கள்…!!
நன்றி.
ஆம். இது ஒரு காதல் திருமணமே..!!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.