எழுதியவர்: நா.பா.மீரா

ஆரு..இந்த வீக் எண்ட் ஏலகிரி வந்துடு . என்னோட முன்னாள் காதலியை அறிமுகப்படுத்தப்போறேன். என்னோட உணர்வுகள நீ புரிஞ்சிப்பேன்னு நம்புறேன்.. உடனே போனைக் கட் செய்துவிட்டான் விபின்.

படுக்கையில் விழுந்த ஆரண்யாவின்  நினைவில் விபினை முதன்முதலில் சந்தித்த தருணங்கள் நிழலாடின. 

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து ..படித்து பெங்களூருவில் வேலை தேடிக் கொண்ட ஆரண்யாவுக்கு வனம் என்றால் உயிர். 

அடிக்கடி டிரெக்கிங் கிளம்பிவிடுவாள். 

வனம் விரும்பியான விலங்கு மருத்துவர் விபினுடன் நட்பு ஏற்பட்டு காலப்போக்கில் காதலாக மாறியது.

இந்த சூழ்நிலையில் ..முன்னாள் காதலி என்கிறானே, அப்போ என் நிலை? வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். 

ஏலகிரி …

ஆதவனின் செந்நிறக் கதிர்கள் ஒளி பாய்ச்ச …கீழே  சுழித்தோடும் ஓடை … இருள் படர்ந்த வனம் …

வாவ் பியூட்டிபுல்.. தன்னிலை மறந்து கூவினாள் ஆரண்யா.

உன்னைவிடவா … என்ற விபினின் குரலில் கலைந்தவள் …

இந்த நிமிஷம் உயிர் போனால்தான் என்ன?…வாய்விட்டே அரற்றிவிட்டாள் .

என் உயிரை வயிற்றுல சுமந்துட்டு என்ன பேச்சு …கடிந்துகொண்ட விபின் …

அப்புறம் என் முன்னாள் காதலி கோவிச்சுப்பா …என்று அந்த வனத்தைச் சுட்ட …

உணர்ச்சி மிகுதியில் அவனைக் கட்டிகொண்டாள் ஆரண்யா.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!