எழுதியவர்: திவ்யாஸ்ரீதர்
தேர்வு செய்த தலைப்பு: நீர்
மாரிமுத்து காய்ந்த தரிசாய் போன நிலத்தைப் பார்த்து கண்ணீர் விட்டார்.
காலம் தப்பி பெய்த பருவ மழையால் ஏற்பட்ட விளைவு அவரையும் அவர் குடும்பத்தாரையும் வறுமையின் பிணியில் தள்ளியது.
இன்பமாய் அவ் வயலில் அறுவடை செய்து. நெல் மணிகளையும் தானியங்களையும் முட்டை முட்டையாக அல்லிய சிறுவயது நினைவுகள் நெஞ்சில் நிழலாட கால்கள் தானாய் நடந்தன.
திடீரென்று கார் மேகங்கள் சூழ. அதிரன் வானில் சத்தமாய் முழங்கினான்.
எதிர்பாராமல் பெய்த ஆழி மழை மாரிமுத்துவை முழுமையாய் நினைத்தது. அவர் அந்த இடத்தை விட்டு நகராமல் அந்த மழையை வரவேற்றார்.
எரித்தழல் என கொதித்து கொண்டிருந்த உள்ளம் மெல்ல குளிர்ந்தது.
சில்லென்ற காற்றோடு வருணனின் வருகை மனதில் புத்துணர்வு தந்தது.
மாரிமுத்து புது தெம்போடு காய்ந்த அந்த நிலத்தின் பக்கம் போக அது தொலியோடு காட்சி தந்தது.
அந்த ஈரமான மண்ணை மிதித்தபோது அவர் கால்களுக்குள் ஒருவித சிலிர்ப்பு உண்டானது. நெடுநாட்களாக வறண்டு கிடந்த பூமி தாய், இப்போது கருணை மழையால் நனைந்து பசுமை போர்த்த தயாராக இருப்பது அவருக்குள் நம்பிக்கையை விதைத்தது
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.