படம் பார்த்து கவி: அடங்காத மனிதர்களை கண்டு

by admin 1
50 views

அடங்காத மனிதர்களை கண்டு
கொதித்து தான் போனதென்னவோ?
கழிசடைகளை காவு வாங்க
நல்ல ஆத்மாவும்
கூட போனதென்னவோ?
அதிகம் ஆடாதே
அடுத்த நொடி
உனக்கு சொந்தமானது அல்ல!
என் நிலம் இது
ஆறடியும்
நிரந்தரமாய்
உனக்கு சொந்தமானது அல்ல

-பூமி மாதா-

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!