படம் பார்த்து கவி: உயரமான

by admin 1
56 views

உயரமான மலைச் சிகரத்தில்
ஒன்றுமில்லாத மரக்கிளையில்
யானை ஒன்று அமர்ந்திருக்கு

அது யானையே அல்ல
யானை வேடம் தரித்த
எலி என்றேன்

ஏளனமாக சிரித்தனர் என்னை
எள்ளி நகையாடினர் சிலர்

பட்ட மரத்தில் யானை
ஏற முடியாது முதுகு தண்டு
நிமிர்ந்து அமர முடியாது
என்ற ஞானம் இல்லாத மூடர் சிலர்

எதையும் பின் இருந்து பார்த்தால்
பிழையாய் தான் ஆகும்
முன் சென்று பார்த்தால்
புதுக் கோணம் தோன்றும்
என்ற ஞானம் வளர
மனசு மாற வேண்டும்
சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!