படம் பார்த்து கவி: உருகி

by admin 1
100 views

உருகி உருகி ஒளி
உமிழ்கிறாய்
கருகும் திரியான பின்
கசக்கிவிட்டு

காணாமற் போன பின் தேடுவாரோ
கண்டு கொள்ளா மாந்தர்
உனை

தன்னை யழித்து தகைசால் உதவுவாரை
பின்னை நினைக்கா பேருலகம் இது.

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!