படம் பார்த்து கவி: செஞ்சுடர்

by admin 1
58 views

செஞ்சுடர் பரிதியாலே
பனி மலை உருகுது
நதியென உருளுது

உருளும் நதியை
ஒளி ஊடுறுவும்
உருளை குடுவையில்
வழுக்கு பாறை மேல்
நிறுத்தி பார்த்தால்

மலையும் மடுவென
பரதியும் பொறியென
குடுவைக்குள் அடங்கும்

மனக்கவலை எனும்
மாமலை
கண்ணீரில் பாதி கரையும்
கண்ணீரில் கரையாமல்
குடுவை தண்ணீரில்
பார்த்தால் மடு வென மாறும்
சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!