மலை போல் குவிந்தாலும்
மனதில்லை களைவதற்கு
மேலும் மேலும்
சேர்ந்தே போகுமது.
ஒரு நாளும் களத்தில் இறங்கி,
சுத்தம் செய்யோம்.
துப்புரவு தொழிலாளர்
தம்மையே தேடும் மனது;
நாம் இட்ட குப்பை
நாமே சுத்தம் செய்ய,
துப்புரவு தொழிலாளர் வலி அறிவோம்.
அவர் தம் கூலி கூட்டுவோம்.
நம்மால் இயலாததை நமக்காக அவர் செய்ய
நன்றியுடன் நாம் இருப்போம்.
சசிகலா விஸ்வநாதன்
