படம் பார்த்து கவி: நல்லுடற் காவலன்

by admin 1
227 views

நட்டு வைத்த நாவாசைக்கெல்லாம்
முட்டிடும் வெள்ளைப் பாறையை
எட்டித் தள்ளி எதிர்த்து நின்று
கட்டி உதிர்ந்த மணற்சிற்பமாய்
புட்டாய் உதிர்த்த லட்டாய்
சொட்டச் சொட்ட இனிமை நவின்று
புகட்டத் தடை கொண்டோருக்கும்
திகட்டாத் திரவியமானாலும்
சிட்டிகையால் சீரற்று இரைக்காது
பட்டுக்கையால் பட்டெனத் தூவி
கட்டுக்கோப்பாய் கவனித்துண்டால்
கட்டுடல் மேனி என்றும் கைவசமே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!