படம் பார்த்து கவி: நிலமகளும்

by admin 1
101 views

நிலமகளும் பசலை
கொள்கிறாள்
சீதளம் மிக்க
அந்திவலை துளிகளில்….

ஆலியவன் அலைச்சாரலில்
நாணலும்
நாணம் கொண்டு
சில்லிடுகிறாள்..

மென்சாரல் அவள்
பொன்மேனி தொட
மேககூட்டம் மோகம்
கொண்டு கார்முகிலாய் மாற
பனித்துளியில்
இல்லா பேரழகை
மழைத்துளியில்
கண்டு விடுகிறாள்
வனமகள் ✨✨✨

🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍

You may also like

Leave a Comment

error: Content is protected !!