படம் பார்த்து கவி: பயணம் செய்யும்

by admin 1
52 views

பயணம் செய்யும் பாதையிலே
பள்ளம் ஒன்று கண்டேன்
நித்தம் தன் வழி தடம் மாற்றும்
வெள்ளம் என்று கொண்டேன்

பாதை மாறிய பயணத்தால்
பிளவு பட்ட என் வாழ்வில்
யார் வந்து தார் ஊற்றி
சீர் செய்ய போவது
தேர் ஓடும் பாதையாய்
அதை மாற்ற போவது
பாதை மாறிய பயணம்
என்றும் ஊர் செல்வதில்லை
ஊர் சொல்லும் பாதையில்
நாம் செல்வதில்லை!!

சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!