படம் பார்த்து கவி: விளையாடச் சென்ற மகள்

by admin
157 views

விளையாட சென்ற மகள்

வீடுதிரும்பும் வேளையிலே

இளைப்பாற அமர்ந்துவிட்டாள்

இலை மீது மழைதுளியாய்!

அன்னையவள் வாசம்தனை

அருகினிலே உணர்ந்ததுமே,

வழிந்தோடி சிதறுகின்றாள்

துளித்துளியாய் அவள் மீது. சரண்யா சதீஷ்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!