படம் பார்த்து கவி: பிரம்மாண்டம்

by admin 1
100 views

நீல வானின் இரவில்
நகரத்தின் நிசப்தம் கண்ணாடித் திரையில்
கட்டிடங்களின் உச்சிகள்
ஒளியின் கோபுரமாய்
ஆடம்பர அறையின் அணைப்பில்
மெத்தையின் வெதுவெதுப்பில்
தனிமையின் நிழல் விழுந்திருக்க
பணத்தின் பிரம்மாண்டம்
சாளரத்தின் வெளியேயும் உள்ளேயும்?
இரவு நீள, நகரம் உறங்க
மௌனத்தின் மொழி
சொல்வதென்ன?

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!