மெய் எழுத்து போட்டி கதை: அன்பின் அடையாளம்

by Nirmal
154 views

எழுதியவர்: நா.பத்மாவதி

மெய் எழுத்து வார்த்தை: அப்பா / ப்

அலமாரியில் போட்டிகளில் வென்ற கோப்பைகளைப் பார்த்த செல்வத்தின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

பள்ளியில் படிக்கும் போது புத்தகங்களை வென்றதை மகிழ்ச்சியுடன் அப்பாவிடம் காட்ட, “நான் படிக்க முடியாதது உன் மூலமாக நிறைவேறியது” என்றார்.

கடலளவு கனவுகளோடு வாழந்த
செல்வத்துக்கு நீச்சலில் அபார ஆர்வம். அவன் அப்பாவிடம் கேட்க ” நீச்சல் கத்துகிட்டு நீந்தி என்ன செய்யப்போற?” அவரைப் பொறுத்தவரை படிப்பிற்குதான் முதலிடம்.

ஒருநாள், செல்வம் ஒரு நீச்சல் போட்டியில் மாநில அளவில் பெற்ற வெற்றி, அவனை சர்வதேச போட்டிக்கே அழைத்துச் சென்றது. அவன் கனவு நிறைவேறியது என மகிழ்ச்சி அடைந்தார்.

அவனுக்கு ஒரு நாள் திடீரென வேலை போனது. “செல்வம், கஷ்டம் நேரும் போது அதை கடக்க தெரிந்தால் தான் வாழ்க்கை எளிதாக நகரும்.” என்ற வார்த்தைகள் அவனை மேலும் திடமாக்கின.

அப்பாவின் தியாகத்தையும், அன்பையும், பெருமையையும் நினைத்தபடி, அப்பாவின் மாலை போட்டப் படத்தை பார்த்துக் கொண்டே இருந்தான் செல்வம்.

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!