மெய் எழுத்து போட்டி கதை: சிவராத்திரி

by Nirmal
152 views

எழுதியவர்: ஹரிஹர சுப்பிரமணியன்

மெய் எழுத்து வார்த்தை: சிவம் / ம்

அந்த  கிராமத்து கோவிலில்  உள்ள  சிவன் கோவில் மிகுந்த பிரதானமான
கோவில் , கிராமத்து  வாசிகள் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்தாலும்  சிவராத்திரிக்கு  தவறாமல்  அந்த கோவிலுக்கு  வந்து விடுவர்.

அந்த ஊரில் அரசு பணி புரிந்து  ஒய்வு பெற்று  சௌகரியமாக குடும்பத்துடன்   குடித்தனம் நடத்தி வரும்  ராமன் பலே கில்லாடி .

சிவராத்திரிக்கு  முதல் நாள் பதிவு  போல அண்டை வீட்டார் , மற்றும் எதிர் விட்டார்  இருவரும்  போன் செய்து  அபிஷேகம்  செய்ய    பத்து லிட்டர் பால்  வாங்கி வைக்க  சொல்லி  விட்டனர் .

அடுத்த தெருவில் இருந்த   இன்னொரு   ஸ்நேகிதனும்   அவன்  சார்பாக ஒரு பத்து லிட்டர்  பால்  வாங்கி  அபிஷேகத்திற்கு  கொடுக்க சொல்லி  ஏற்கனவே பணம்  அனுப்பி விட்டான் .

சிவராத்திரி அன்று மொத்தத்தில்  பத்து லிட்டர் பால் மட்டும்  வாங்கி
அர்ச்சகரிடம் கொடுத்து வைத்து   அவனது பாலை அபிஷேகம் செய்யும் முன்  சைகை காட்டுமாறு  ஏற்கனவே கூறி விட்டான் .

அன்று மட்டும்  சுமார் நூறு லிட்டர் பால்  அபிஷேகத்திற்கு    வந்து விட்டதாக    அர்ச்சகர்   கோவிலுக்குள் செல்லும் முன்  கூறி சென்று விட்டார் .

சிவராத்திரி  வந்து விட்டது , ஒரே கூட்டம் ,   அபிஷேகம்  ஆரம்பிக்கும்  வேளையில்   அர்ச்சகர்  அங்கிருந்து  ராமனை பார்த்து கைகாட்டி
அவர் பணியை  தொடர ஆரம்பித்தார் .

அருகில் மும்முரமாக  வணங்கி கொண்டு இருந்த  அண்டை வீட்டு பெரியவரிடம்   ”   இதுதான் உங்க பால் ,  நன்றாக  கும்பிட்டுக்கோங்க ” என்று கூறி  அடுத்த  வரிசையில் கடைசியாக இருந்த    இன்னொரு உறவு காரரை   மெல்ல பக்கத்தில் போய்”       இதுதான்  உங்க பால் ” என்று கூறி  அவரையும்  மகிழ்ச்சி கடலில்   திளைக்க வைத்து விட்டான்

எல்லாம் முடிந்து . வீட்டுக்கு  வந்த போது  அவன் மனைவி   ” என்னங்க , பால் அபிஷேகம்  செய்ய சொன்னேனே ,  செய்தார்களா ? என  அப்பாவியாக  வினவ   ” ஆமாண்டி , பாலுக்கு ரொம்ப  டிமாண்ட் ,  எப்படியோ கஷ்டப்பட்டு  அடுத்த  ஊரில் போய் வாங்கி  வந்து சிறப்பாக  அபிஷேகம்   செய்தாச்சு  ” என்று கூறி  பிரசாதங்களை  வீட்டில் கொடுத்தான் .

மறு நாள்    பால் வாங்கி   கொடுத்த வகைக்கு  என  இரண்டு  வீடு காரர்களும்   தனித்தனியாக   ரூபாயை  கொடுத்து செல்லும் போது
ராமனின் மனைவி  ” என்னங்க, பாலுக்கு  ரொம்ப  டிமாண்ட்  என்று சொன்னிங்களே ,  எப்படி   சமாளி சீங்க : என்று கேட்டாள்.

ராமனோ  அதற்கு  ஆமாண்டி , பால் கிடைப்பது பெரிய கஷ்டம் ,  மொத்தத்தில்  இருபது லிட்டர் தான் கிடைச்சுது . ஒரே தண்ணி,  பால் காரர் நன்றாக  சம்பாதித்து  விட்டார் ” என்று மனைவியிடம்  கூற  அவளும்  அதற்கு
” நீங்க மட்டும்  என்னவாம் ,  இருபது லிட்டர் மட்டும் பாலை  வாங்கி
எனக்கு  தெரிஞ்சு   ஐஞ்சு பேரிடம்  ருபாய்  வாங்கி  உங்க சம்பாத்தியத்தை  பார்த்து  விட்டீர்களா   அது போலத்தான்

பால் காரரும்  :
அவரவர்  சக்திக்கேற்ப  தான் சம்பாதிக்க   முடியும் , ஆனா மேல  இருக்கிற   சிவன் சும்மா  இருக்கிறதா   நினைக்காதீங்க ,,, எல்லாத்தையும்  அவன் பாத்து  எப்போ கணக்கு    தீர்க்கணும்னு தெரியும்  , இனிமேல் இந்த  தப்பை பண்ணா திங்க :  ”   என சொல்லியதும்  ராமன்  சற்று கோபப்பட்டு  ” போடி  , நீயெல்லாம்  எனக்கு புத்தி சொல்ல வந்திட்டியா ” என கோபப்பட்டு  வெளியே  சென்று டீ  கடைக்கு சென்று    சூடாக   டீ சாப்பிட்டு   வீட்டுக்கு வந்து அமைதியாக  தூங்கி விட்டான் ,

மறு நாள்  எழுந்திருக்கும் போது ஒரே வயிற்று வலி ,  மருத்துவரிடம் செல்ல  காத்திருக்கும் போது  வரிசையில்  அந்த பால் காரரும்  இருந்தார் ,

” என்னப்பா , உனக்கும்  வயித்து வலியா?   என்று கேட்க ” ஆமாம் அண்ணே, விடவே மாட்டேங்குது .

எப்பவும் குடிகிற டீ கடையில்தான்  டீ குடிப்பேன் , இனிமே  இந்த  டீ சனியனை  தொடவே கூடாது ” என்று வயிற்றை பிடித்த படி  முனகியவாறு கூறினான் .

சிவன் கோயில் மணி    காலை பூஜைக்கு அடித்த ஒலி சம்பட்டியாக தெரிந்தது .

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர்  இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!