எழுதியவர்: நா.பத்மாவதி
கேள்வி 4: எதிலேயும் தீவிர முயற்சி இல்லாதது ஏன்?
ஒரு பரிதவிக்கும் சாமான்ய மனிதன் ஆதித்யா. மனதில் ஏராளமான கேள்விகளுடன், அவன் ஒரு புனித மலையை அடைந்தான். குகையில் அமைதியாக ஒருவர் கண்கள் மூடி அமைதியாக அமர்ந்திருந்தவர் முகம் கருணை நிறைந்திருந்தது.
கண்கள் திறக்கும் வரை காத்திருந்து “ஐயா… நீங்கள் யார்?” என்றான் மிகவும் தவிப்புடன் ஆதித்யா.
“நீ யார் என்று அறிய வந்தாயா? இல்லையெனில் நீ யாராக வந்தாய் என்பதை கேட்க வருகிறாயா?” என்றார் அந்த முனிவர் போல இருந்தவர்.
“என் மனதில் சில கேள்விகள் இறைவனிடம் கேட்க வேண்டுமன எழுகின்றன. அவற்றை தெளிவுபடுத்த தங்களால் முடியுமா? பதில்களைப் பெற்றால்தான் நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வெளிச்சம் கிடைக்கும்.” என்றான் ஆதித்யா.
“கேள்… ஆனால் ஏன் இநத கேள்விகளை என்னிடம் கேட்கிறாய் என்ற காரணம் கூறு.” என்றார் அந்த முனிவர்.
அடுத்து, ” எதிலேயும் தீவிர முயற்சி இல்லாதது ஏன்? இதை கேட்க காரணம் எந்த வேலையோ, கற்றலோ, செயலிலோ தொடர்ந்த ஆர்வம் இல்லை. சிலநாட்களுக்கு பின் அதில் ஈடுபாடு, விருப்பம் ஏற்படுவதில்லை” என்றான் ஆதித்யா.
“உன் மனதின் பயங்கள், கடந்த கால தோல்விகள், மற்றவர்களின் பாராட்டுக்காக வாழ வேண்டிய அவசியம். இவைகள் உன்னை உன்னிடமிருந்து பிரித்தன. உனது தீவிரம் வெளிக்காட்ட வேண்டிய ஒன்றில்லை; அது உள்ளே கிளம்பும் நெருப்பு. நீ உனது உள்ளத்தைப் பார்வையிட மறுக்கிறாய். அதைத் தொடர்ந்தால், உன் விருப்பம், ஈடுபாடு மீண்டும் துளிர்க்கும்.” என்றார் அவர்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.
