படம் பார்த்து கவி:பச்சை

by admin 3
6 views

பச்சை நிறம் பூசிக் களித்த மரக்கதவு,
முழுக்க மூடி, ஒரு புதிராய் நின்றது.
வினோதம் நிறைந்த அதன் தோற்றம்,
புதுமையின் வாசலைத் திறக்குமோ?
நன்மையா, தீமையா? மனம் குழம்ப,
உணர்வுகளின் அலைகள் உள் பொங்கின.
காலத்தின் நிழல் படர்ந்த அந்தக் கதவு,
மர்மம் விலக்கி, மெல்லத் திறந்தது.
முன்னோக்கி அடி எடுத்து வைத்தாள்,
அவள் கடந்த காலமாய் கரைந்தது பின்னே.
உள்ளே விரியும் புது உலகின் வாசல்,
அவள் தனி உலகின் தொடக்கமாய் பூத்தது.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!