மெல்லிய சாம்பல் நிற போர்வை,…
குழந்தையைத் தாயின் கைகள் போல.. அரவணைக்கும்..
குளிர் காற்று வீசும் போது,
இதமாய் உடலை தழுவும்.
மென்மையான கம்பளி நூல் போர்வை..
அன்பாய் போர்த்தி காக்கும்.
சுகமான தூக்கம் வரும்,
கவலைகள் எல்லாம் போகும்.
போர்வை குழந்தைக்கு நண்பனைப்போல,
எப்போதும் கூட இருக்கும்.!
இ.டி.ஹேமமாலினி