படம் பார்த்து கவி: அகத்தினுள்

by admin 3
13 views

அகத்தினுள் அமர்ந்து அண்டையில் காண்கையில்
பிரம்மாண்டமாகும் பூமியும்
பேரண்டத்திலமர்ந்து  பெரும் தூரத்தில் பார்க்கையில் சிறுகோளமாய் தெரிகையில்
ஆழி சூழ்ந்த அகிலத்தில்
அணுவினும் சிறுத்த இவ்வுயிருக்குள்
ஆக்ரமிக்கும் வலியும் அரையடி விழி தள்ளி ஆராயப்பட்டால்
வழியை மறைக்கும்
வருத்தும் வலியும்
விரலாய் புறந்தள்ளும்
சிறுதுகள் ஆகுமே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!