படம் பார்த்து கவி: அக்கரைப்பச்சை

by admin 1
27 views

அக்கரைப்பச்சை

அக்கரை பச்சை
அழகாக தான் இருக்கும்
எழிலோடு முகில்
மலை உரசி
கொண்டிருக்கும்

துடுப்பில்லாத
ஓடத்திலே
வழியில்லாத
ஓடையிலே
வாழ்க்கை
பயணம்

இளந்தென்றல்
வீசும் போது
தாலாட்டும்
புயல் வந்து
மோதும் போது
தடுமாறும்

அது போகும்
பாதையிலே
பயணமாகும்
தரை தட்டும்
இடம் தானே
இலக்காகும்

சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!