அன்று ஐவிரல் அணைப்பிற்கு அன்னை விரல் பிடியாக
இன்று ஈரமற்ற கைத்தடியை இறுகப்பற்றுகிறேன்
பற்றிய நொடியில் பலவீனம் கொல்கிறது
மூன்று கால் முதியவனென
முதல் அடையாளம் சொல்கிறது
முடிவுப்புள்ளி மிக அருகில்
மூளையும் முழங்க
முகவரியற்ற கடிதமாய்
பெருமூச்சுகளுக்கு பெயராகிறேன்
கடாசாது அக்காகிதத்தைச் சுமக்கும் காக்கிப் பையாய்
கருணையோடு எனை கைத்தாங்குகிறது என் கைத்தடியும்!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: அன்று
previous post