அறுபத்திநாலு கட்டங்களுக்குள்ளே அவளது ஆட்டமனைத்தும்
அங்கொருத்தி இங்கொருத்தி என்றே இருந்தாலும்
அவரவர் ஆட்களை ஆபத்தின்றி
ஆதரிக்கவே
அறிவுடைய அத்தனை ஆட்டமும் அரங்கேற்றிடுவாள்
ஆற்றல் அதிகம் அவளிடம் இருப்பினும்
ஆட்டமெல்லாம் எதிர்த்து வரும் அன்னியரிடமே
ஆணாதிக்கம் அங்கில்லையே அரசனுக்கும் காவலவள்
அரவமிழந்து போய்விடுமே அவளழிந்து போய்விட்டாலே
பரவும் படை சூழ்ந்தாலும் பதராதவள்
கர்வம் கொண்டாடும் தன்னல தரணியிலே
ஆர்வம் கொண்டே அடுத்தவரை காத்திடுவாள்
*குமரியின்கவி*
*சந்திரனின்சினேகிதி*
_சினேகிதா ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: அறுபத்திநாலு
previous post