படம் பார்த்து கவி: இரும்பு ரதம்

by admin 1
31 views
  • இரும்பு ரதம் *
    அண்டை நாட்டின்
    அதிசய கண்டெடுப்பே,!
    விண்ணை பிளந்து வரும் நீ.,
    நீரையும் நிலக்கரியையும் உண்டு
    மேககூட்டங்களுக்கு துணையாக
    தன் ஆவியை ஆர்ப்பரித்து
    சூரியனை மிஞ்சும் தகதகப்பில்
    கண்களை திறந்து,;!
    உன் கர்ஜணையாள் ஊரே
    திரும்பி பார்க்க வைத்து,;!
    தண்டவாளத்தின் மீது
    தாண்டவம் ஆடி
    இடம் விட்டு இடம்
    மாறும் இரும்பு மாளிகையே,;!
    எவருமில்ல நடுக்காட்டில்
    சென்றாலும் நீ தாலாட்டி
    உறங்க வைத்து விடுவாய்,;!
    கடல் மீது சென்றாலும்
    கண்களுக்கு விருந்தளித்து
    விடுவாய்,;!
    நிலத்தில் சென்றாலும்
    நினைவுகளில் நீங்கா
    இடம்பிடித்து விடுவாய்,;!
    உனை காண்பவர்களை
    மனதாள் கட்டி போட்டு
    தன்னுள் அர்ப்பணித்து
    பயணிக்க வைக்கும்
    அர்ப்புத படைப்பு நீ…,;!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!